எத்தனை கோடி கொடுத்தாலும் தோனியை தட்டி ததூக்கும் ராஜஸ்தான்… தோனியை விட்டு கொடுக்க போகிறதா சிஎஸ்கே.?

0
Follow on Google News

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பாண்டு சீசன் முடிந்த உடனே, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஐபிஎல் 2024 மினி ஏலத்தைப் போலல்லாமல், ஐபிஎல் 2025 மெகா ஏலமாக இருக்கும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதோடு, ஒரு ரைட் டு மேட்ச் கார்ட் வாய்ப்பும் வழங்கப்படும். மற்றபடி அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலம் மூலம் மட்டுமே பெற முடியும். கடந்த ஆண்டு ஏலம் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில், நடப்பாண்டின் இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலம் எங்கு நடைபெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஐபிஎல் 2025 சீசனானது ஐபிஎல் 2024 போன்றே, ஒரு அணிக்கான பாதி போட்டிகள் உள்ளூர் மைதானத்திலும், மீதமுள்ள போட்டிகள் வெளியூர் மைதானங்களிலும் நடைபெறலாம். அதேநேரம், நடப்பு தொடரில் சில அணிகள் ஒவ்வொருமுறை மட்டுமே மோதும்படி அட்டவணை தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா 2 முறை மோதும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தற்போதுவர அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், இந்த ஆண்டின் 74 போட்டிகளுடன் ஒப்பிடும்போது, அடுத்த சீசனில் ஒளிபரப்பாளர்களின் (டிஸ்னி ஸ்டார் மற்றும் ஜியோ) கோரிக்கையின்படி 84 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. . 2027ல் இந்த எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2025-ல் இதே பத்து அணிகள் இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளது.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐபிஎல் 2024 சீசனைப் போலவே, ஐபிஎல் 2025 மார்ச்-மே காலத்தில் நடைபெறும். இந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும். இந்த சமயத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் “ப்ளே ஆஃப்” போட்டிக்குத் தகுதிப் பெறாமல், சிஎஸ்கே வெளியேறியது குறித்து இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பப் பலருடைய கேள்வி என்னவென்றால், தல தோனி, தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியை ஆடிவிட்டாரா? இல்லைய? ஓய்வு அறிவிப்பு எப்போதும் வரும்? ப்ளேயர் இல்லாவிட்டாலும் சிஎஸ்கே-வில் என்ன ரோல் செய்யப் போகிறார் தோனி? என பல கேள்விகள் நம்மைச் சுற்றி வருவது.

முதல் முறையாக 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து வியப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடங்கி 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று தான் வீரர்களின் அதிகபட்ச ஒப்பந்த தொகை என்பது ரூ.20 கோடியை கடந்துள்ளது. தோனியை விடுவித்தால் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் அவரை வாங்க போட்டி போடும். அதேநேரம் நேரம் அவரை தக்க வைத்தால் ருத்துராஜ், சிவம் துபே, ஜடேஜா இவர்களில் ஒருவரை இழக்க வேண்டும். அவர்கள் ஏலம் சென்றால் கண்டிப்பாக அவர்கள் விலை 20 கோடிக்கு செல்லும்.

ஏலத்தில் தோனி வேறு சென்றால் ஆர்டிஎம் முறையில் சிஎஸ்கே வாங்கும். ஆனால் விலை அதிகமாக இருந்தால் அதுவும் கடினம். அதேநேரம் மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிஎஸ்கே அணியானது 5 முக்கிய வீரர்களை விடுவிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், மொயின் அலி ஆகிய 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.