களமிறங்கிய விட்டார் வடிவேலு… நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் பூஜை!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக கொடிகட்டி பறந்தவர் வடிவேலு. 2011 ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வந்து திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அவரின் சினிமா வாய்ப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது. அந்த முட்டுக்கட்டை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீங்கவே இல்லை.

இப்போதுதான் ஒரு வழியாக அவர் படங்களில் நடிக்க முடிவு செய்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை வடிவேலுவின ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சுராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது.

படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் நடக்க உள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.