விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள்… இன்னும் இந்தியா வராமல் வெளிநாட்டில் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்..

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தளபதி விஜய் தனது அடுத்த படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் கைகொடுத்துள்ளார். அவரது 68 ஆவது படமான இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். படத்தில் விஜய், தந்தை – மகன் மற்றும் எதிர்நாயகன் என 3 வேடங்களில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா மோகன், ஸ்னேகா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் 68வது படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்கான வேலையாக சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு சென்றனர். அங்கு விஜய்க்கு லுக் டெஸ்ட் நடைப்பெற்றது. தற்போது அங்கு அனைத்து வேலையும் முடித்துவிட்டு வெங்கட் பிரபு அர்ச்சனா கல்பனா அனைவரும் சென்னை வந்து விட்டனர்.

ஆனால் தளபதி விஜய் அவர்களுடன் வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம் ‌ ஏனெனில் தளபதி விஜய் அங்கிருந்து நேரடியாக நார்வே பறந்துள்ளார். அங்க அவரின் ட்ரிப்பை தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த சமயத்தில் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்தால் ‘லியோ’ படத்திற்கு பாதிப்பு வரும் என்று கருதப்படுகிறது.

இதனால், விஜய்யின் 68வது படம் குறித்த தகவல்களை அப்படக்குழு கொஞ்சம் ரகசியமாகவே வைத்துள்ளது. இந்த நிலையில், சினிமா வட்டாரங்களில் இருப்போர் புதிதாக சில தகலவ்களை வெளியிட்டுள்ளனர். அதில், அக்டோபர் 1ம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சென்னையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த நாளிலேயே படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அப்பா கேரக்டருக்கு ஜோதிகா நாயகியாகவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கேரக்டரில் சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவுள்ளார். படத்தின் சூட்டிங் அதிகமான அளவில் சென்னையில் எடுக்கப்பட உள்ளதாகவும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் வெங்கட் பிரபு ஸ்டைலில் மாஸ் எண்டர்டெயினராக உருவாகவுள்ளதாகவும் விஜய்யை இந்தப் படம் வித்தியாசமாக காட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.