ரீல் ஹீரோ, ரியல் ஹீரோனு, சமூக நீதினு பேசுறதோட உள்நோக்கம் என்ன? அவரு “ஜோசப் விஜய்”ன்றதுதான் பிரச்சனை..! முக்கிய பிரபலம் காட்டம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் இறக்குமதி வரிக்கு, வரிவிலக்கு கேட்ட வழக்கல வந்த தீர்ப்ப பத்தி நிறைய சந்தேகங்கள் மக்கள் கேட்டாங்க. அதுல முக்கியமான கேள்வி வழக்கு போட்டது தப்பா? அதுக்கு சட்டத்துல இடம் இல்லையா? என பிரபல தொகுப்பாளனியும் பிரபல பெரியாரிஸ்ட் பனிமலர் பன்னீர்ச்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் அவர் கூறியதாவது. வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடுறது தப்பே இல்லை. அதுக்கு இந்தியாவோட எல்லா குடிமகனுக்கும் உரிமை உண்டு.

அதுக்காக தான் வரி சம்மந்தாமன வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதிகள் எல்லாம் இருக்காங்க. So விஜய் வழக்க போட்டது தப்பில்லை. நம்ம பதியிற வழக்குல நிவாரணம்னு ஒன்னு கேப்போம். ஆங்கிலத்துல prayerனு சொல்லுவாங்க அதாவது என்ன தேவைக்காக அந்த வழக்கு பதியப்படுதுங்கிற பகுதி அது. அந்த நிவாரணம் மனுதாரருக்கு வழங்கலாமா வேண்டாமா, சட்டப்டியானதா, சட்டத்துக்கு புறம்பானதாங்கிற விசாரித்து தீர்ப்பு வழங்குவது தான் நீதிபதிகள் வேலை.

இந்த வழக்கை பெறுத்தவரை நடிகர் விஜய்க்கு அவர் கேட்ட நிவாரணம் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த வாரம் கூட மித்ராங்கிற குழந்தைக்கு உயிர்காக்கும் மருந்துக்கு வரி விலக்கு கேட்டு அரசாங்கத்துக்கு கோரிக்கை வச்சிருக்காங்க. ஆனா அதுவும் இதுவும் ஒரே மாதிரியான வழக்கல்லங்கிறத நம்ம புரிஞ்சிக்கனும். ஏன்னா மருந்து அத்தியாவசிய பொருள், கார் ஆடம்பர பொருள். சச்சினுக்கு மட்டும் Ferrari carக்கு வரிவிலக்கு குடுக்கப்பட்டதுனு ஒரு கேள்வி வைக்கிறாங்க.

சச்சின் விலை குடுத்து வாங்கல அவருக்கு அது பரிசா குடுக்கப்பட்டது, அது போக அவர் வரிவிலக்கு கேட்டு வழக்கு போடல, அரசாங்கத்துக்கும் கோரிக்கை வைக்கல இந்திய அரசு தானா முன்வந்து செய்தது ஆனா பின்னாடி அது பொது மக்கள் மத்தியில பிரச்சனை ஆனவுடனே வரி கட்டீட்டாரு. அதனால இந்த விசயத்துலயும் விஜய் வரி கட்டீட்டா பிரச்சனை முடிஞ்சிரும். நன் வரி விலக்கு கேக்க சட்டத்துலயே இடம் இருக்குறபோது ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்துல முறையிட்டு விஜய் கேட்ருக்காரு.

குடுக்குறேனு சொல்லுங்க இல்ல குடுக்கலனு சொல்லி வழக்க தள்ளுபடி பண்ணணுங்க அதவிட்டுட்டு எதுக்கு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோனு, சமூக நீதினு பேசுறதோட உள்நோக்கம் என்ன? எது உங்கள எரிச்சல் படுத்துது?
இதுல வரி விலக்கு கேட்டத, வரி ஏய்ப்புனு நியூஸ் போட்ற நிபுணர்கள் தொல்ல வேற. எதாச்சும் உருப்படியான வேலைய பாருங்க மக்களே. இவனுகளுக்கு விஜய் வரிகட்டனும் கட்டக்கூடாதுன்ற பிரச்சனை எல்லாம் இல்ல, அவரு “ஜோசப் விஜய்”ன்றதுதான் பிரச்சனை தான் என பனிமலர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.