ரஜினிகாந்த் மருமகனை கண்டிக்க வேண்டும்….. இல்லை இந்து விரோத தனுஷ் தப்ப முடியாது.! முக்கிய பிரபலம் எச்சரிக்கை …

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிக்கும் “திருச்சிற்றம்பலம்” என்ற திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கோடானுகோடி இந்து தமிழர்களின் நம்பிக்கை சொல்லை கொச்சைப்படுத்த வேண்டாம் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில்கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு “திருச்சிற்றம்பலம்” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றக்கூடிய இந்து தமிழர்கள் பெரிதும் மதித்து சொல்லக்கூடிய
ஒரு சொல் “திருச்சிற்றம்பலம்.” “திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ” தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே….!என்று எங்கள் சிதம்பர நடராஜ பெருமானை உலக இந்து சைவ பெருமக்கள் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் தனுஷ் இந்து சமயங்கள், புனிதமாக மதிக்கும் ஏற்கனவே உயர்வாக நடிக்கப்பட்ட படங்களின் பெயர்களை கேலிப் பொருளாக மாற்றி சிந்திக்ககூடிய அளவில் திருவிளையாடல் ,கர்ணன் அசுரன்,…. என்றெல்லாம் திரைப்படங்களை எடுத்து “சாதிய வன்மம் ” தமிழ் சமுதாயத்தில் மேலும் அதிகம் விதைக்கப்பட காரணமாக இருந்தார் என்பது நாம் அறிந்ததே! தற்போது திராவிட சிந்தனையோடு வந்த
திமுக குடும்பத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் வரக்கூடிய “திருச்சிற்றம்பலம்” என்ற திரைப்படம் வணிக நோக்கத்தோடு எடுக்கப்பட்டாலும் கூட வேறு பெயரை வைத்துக் கொள்ளுங்கள் என்றுபடக்குழுவினரை நாங்கள் வேண்டுகிறோம்.

இல்லை எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? நாங்கள் தான் படத்தின் பெயரை முடிவு செய்வோம் . நீங்கள் யார் சொல்வதற்கு என்று அறிவுக்குப் பொருந்தாத; அர்த்தமற்ற வாதத்தை முன்வைப்பார்களேயானால் “அல்லாஹு அக்பர் ” கன்னி மேரி ஜீசஸ் அல்லேலூயா….. திருட்டு ரயில் அல்லது ரயில் திருடன் என்றெல்லாம் பெயர் வைத்து திரைப்படம் எடுத்து நடிகர் தனுஷ் நடிக்க கலாநிதிமாறன் குழுமத்திற்கு துணிச்சல் இருக்கிறதா? என்ற எதிர் கேள்வியை முன் வைக்க வேண்டிய சூழல் உருவாகும்.

நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்கள் இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும். இல்லை பணம் தான் எங்களுக்கு பிரதானம் என்றால் இறைவன் கொடுக்கும் தண்டனைக்கு இந்த இந்து விரோத தனுஷ் உள்ளிட்ட திரைப்பட “கருத்தியல் கும்பல்” தப்ப முடியாது. திரைப்படத்துறையில் தெய்வ விரோத, தேசிய விரோத சாதிய வன்மம் கொண்ட வேற்று மத சிந்தனை கொண்ட கைக்கூலிகளின் பிடியில் நடிகர் தனுஷ் இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்தித்து வேண்டுகிறோம். இல்லையெனில் இந்து சமுதாயம் இவர்களை எதிர்த்து பக்தி ஆன்மீக ஜனநாயக வழியில் பிரார்த்தனை போராட்டங்களை செய்வார்கள். “இந்த அமைதி வழிப் போராட்டம் ; வன்மை மிகுந்த போராட்டங்களை விட பலன் கொடுக்கக் கூடியது” என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அடியார் பெருமக்கள் மனம் கலங்கி பிரார்த்தனை செய்தால் அகிலத்திற்கு கேடு உண்டாகும். நடிகர் தனுஷ் திருந்த வேண்டும் அல்லது திருத்தப் படுவார் என இந்துதமிழர்கட்சி நிறுவனதலைவர் இராமஇரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.