அறக்கட்டளை…சினிமா…ஹவாலா பணம் …… தாவூத் இப்ராஹிம் வேடத்தில் செல்வராகவன்..! திரௌபதி இயக்குனரின் புதிய படத்தின் கதை இது தானா.? கசிந்தது ரகசியம் ….

0
Follow on Google News

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களில் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. வாட மாவட்டங்களில் நடக்கும் நாடக காதல் குறித்து பெண்கள் மற்றும் பெண்களில் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் திரௌபதி படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார் மோகன் ஜி, இந்த படத்தில் அடங்குனா அடங்க கூடாது என எங்க அண்ணன் சொல்லிருக்கிறார் போன்ற வசனங்கள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மேலும் திரௌபதி படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் தமிழக அரசியலில் இருக்கும் ஒரு முக்கிய தலைவர் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது என சர்ச்சைகள் வெடித்தது. திரௌபதி படத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அடுத்த படம் ருத்ரதாண்டவம், போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றி பெற்றது.

இயக்குனர் மோகன் ஜி படங்களில் இடம் பெரும் குறியீடுகள் பெரும் விவாத பொருளாக மாறும் என்பது குறிப்பிடதக்கது மேலும் இவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மருத்துவர் ராமதாஸ்க்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றவர். இந்நிலையில் திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர்/நடிகர் செல்வராகவன் நாயகனாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுமார் மூன்று கதைகளை இயக்குனர் மோகன் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது, அதில் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் குறித்த கதையும் ஓன்று என கூறபடுகிறது. சினிமா பிரபலங்கள் உடன் தனக்கு இருக்கும் தொடர்புகளை பயன்படுத்தி அவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலமாக ஹவாலா பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவது. மேலும் சினிமாவில் முதலீடு செய்து ஹவாலா பணத்தை எப்படி வெள்ளை பணமாக மாற்றப்படுகிறது.

இதே போன்று தங்கம் கடத்தல் என இந்திய அரசாங்கத்துக்கே சவால் விடும்படி செய்யப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிக்கு எதிராக இந்திய உளவு பிரிவு எப்படி கையாள்கிறது என்பது தான் இயக்குனர் மோகன் ஜி உருவாக்கிய மூன்று கதைகளில் ஓன்று என கூறப்படுகிறது. ஆனால் அதில் தாவூத் இப்ராஹிம் குறித்த கதையை இயக்குனர் மோகன் தேர்வு செய்துள்ளாரா அல்லது, மற்ற இரண்டு கதைகளில் எதாவது ஒன்றை தேர்வு செய்துள்ளாரா என்பது பற்றி எந்த தகவல் கிடைக்காத நிலையில்.

ஒரு வேலை தாவூத் இப்ராஹிம் குறித்த கதையை தேர்வு செய்திருந்தால் அந்த படத்தில் தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வாய்ப்புகள் இருக்கலாம் என கூறபடுகிறது. இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் இது எந்த மாதிரியான படம் என்பது குறித்து தெரியவரும் என்றும், அதுவரை இந்த குழப்பம் நீடிக்கும் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.