ஐஸ்வர்யாவை – தனுஷ் விவகாரம் சௌந்தர்யா வீட்டில் வெடித்தது பிரச்சனை..! இரண்டாவது கணவரை விட்டு பிரிகிறாரா சௌந்தர்யா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், இவர்கள் பிரிவு விவாகரத்து வரை சென்று விட கூடாது என்பதில் இரண்டு தரப்பு குடும்ப உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா – விசாகன் தம்பதியினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா 2010ம் ஆண்டு அஸ்வின் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், 2017ம் ஆண்டு முதல் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். அடுத்த இரண்டு வருடத்தில் தொழில் அதிபர் விசாகனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. இந்த திருமணம் விசாகனுக்கும் இரண்டாவது திருமணம், அவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதும் விசாகன் நீண்ட நாள் கனவு, சௌதர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பே திரைப்படங்களில் நடித்தவர் விசாகன். ஆனால் அவர் பிரபலமாக அறியப்படவில்லை. ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்ட பின்பு தான், ரஜினிகாந்த் மருமகனாக பிரபலமாக அறியப்பட்டார். இந்நிலையில் சௌதர்யாவை காதலித்த போதே, இவரை திருமணம் செய்து கொண்டால் மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் சாதித்து விடலாம் என்கிற ஆசை விசாகனுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தொடர்ந்து சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி ஐஸ்வர்யா – தனுஷ் இடையே ஏற்பட்டு வரும் பிரச்சனையால், விசாகன் சினிமாவில் நடிக்க தொடங்கினால் தனுஷ் போன்றே அவரும் சக நடிகைகளுடன் நெருக்கமாகி விடுவார் என்கிற அச்சத்தில் கணவர் விசாகனை சினிமாவில் நடிக்க எதிர்ப்பு இதுவரை தெரிவித்து வந்துள்ளார் சௌந்தர்யா. இதனால் சினிமா கனவில் இருந்த விசாகன் மிக பெரிய ஏமாற்றத்தை அடைந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஓடி கொண்டிருக்கும் இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார் விசாகன். தற்போது சினிமாவில் நடிக்கும் தனது விருப்பத்தில் பிடிவாதமாக இருந்தால், ஏற்கனவே ஐஸ்வர்யா – தனுஷ் பிரச்சனை நடப்பதால், தனது விருப்பத்துக்கு எதிராக பிரச்சனை செய்ய மாட்டார்கள் என திட்டமிட்டு தற்போது சினிமாவில் நடிக்கும் விருப்பத்தை மனைவியிடம் தெரிவித்துள்ளார் விசாகன்.

மனைவி வேண்டாம் என மறுத்தும் தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் கதை கேட்கவும் தொடங்கியுள்ளார் விசாகன் என கூறப்படும் நிலையில், சௌதர்யாவுக்கு விசாகனின் இந்த செயலில் துளியும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த விவகாரம் சுமுகமாக முடியுமா.? அல்லது ஐஸ்வர்யா – தனுஷ் விவகாரம் போல் விஸ்வரூபம் எடுக்குமா என்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.