மீண்டும் இணைகிறார்களா தனுஷ் – ஐஸ்வர்யா.? தடபுடலாக திருப்பதியில் நடந்த ஏற்பாடு…கடைசி நேரத்தில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததது. திருமணம் முடிந்த ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வந்த தனுஷ், மனைவி குடும்பத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்ட பின்பு தான், சக நடிகைகளிடம் கிசு கிசுவில் சிக்கியவர், பின் அடுத்தடுத்து இதே வேலையாகவே இருந்து வருகின்றார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து இருவரில் யாருக்கும், யாரும் கீழ் படிந்தவர்கள் என முடிவு செய்து. கணவன் மனைவி இருவரும் பிரிவதாக அறிவித்து சுமார் கடந்த 18 வருட திருமண வாழ்க்கையை முடிந்து கொண்டுள்ளார். இதில் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு சுமுகமாக பிரச்சனை இல்லாமல் அவரவர் பாதையில் சுதந்திரமாக வாழலாம் என நினைத்தார்கள்.

ஆனால் இருவரின் குடும்பத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதன் பின்பு இரண்டு அல்லது மூன்று தினத்தில் குடும்ப உறுப்பினர்களை சரி செய்து விடலாம் என நினைத்தவர்கள், அதில் இருவரும் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து அப்பாவின் கோபத்துக்கு ஆளான ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ்வதற்கு முன் வந்தார். இதற்கான பேச்சுவார்த்தையில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கஸ்தூரி ராஜா எவ்வளவோ பேசியும் தனுஷை சரி கட்ட முடியவில்லை. அப்பா நான் இனிமேல் தான் சுதந்திரமாக வாழப்போகிறேன் என தனுஷ் தெரிவிக்க. கஸ்தூரி ராஜா பல மணி நேரம் வரை இது குறித்து தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அப்பாவின் நச்சரிப்பின் காரணமாக சரிங்கப்பா பார்க்கலாம், ஆனால் எனக்கு இது பற்றி முடிவு செய்ய சில நாட்கள் தேவைப்படுகிறது என தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா காலம் தாமதம் செய்யாமல் உடனே தனுஷ் உடன் இணைந்து தனது தந்தையை சமாதானம் செய்ய வேண்டும் என மாமனார் கஸ்தூரி ராஜாவிடம் தெரிவிக்க அதற்கு, தற்போது ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஆந்திராவில் இருப்பதால் இரண்டு குழந்தைகளையும் அங்கே வர வைத்து, திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்யும் செய்தி மீடியாவில் வெளியானாலே இந்த விவாகரத்துக்கு முடிவு வந்துவிடும்.

ஆகையால் அப்படியே செய்யலாம் என்றும் நான் சொன்ன என் மகன் தனுஷ் கேட்பார் என ஐஸ்வர்யாவிடம் இந்த தகவலை தெரிவித்த கஸ்தூரி ராஜா, திருப்பதியில் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு அதற்கான வேலைகளை தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளார். இதன் பின்பு குடும்பத்துடன் திருப்பதி செல்லும் திட்டம் குறித்து தனுஷிடம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி ராஜா. இந்த தகவலை கேட்டு ஷாக்கான தனுஷ்,

யாரை கேட்டு இந்த ஏற்பாடு செய்திர்கள், எனக்கு மீண்டும் ஐஸ்வர்யா உடன் இணைத்து வாழ்வதில் துளியும் விருப்பம் இல்லை என தெரிவித்த தனுஷ் ,தயவு செய்து என்ன கட்டாய படுத்த வேண்டாம் என தனுஷ் பிடிவாதமாக அப்பா கஸ்தூரி ராஜாவிடம் தெரிவிக்க, திருப்பதியில் நடக்க இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஐஸ்வர்யா ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.