இரண்டாவது திருமணத்துக்கு தயார்… ரக்க்ஷிதாவை கை பிடிக்க இருக்கும் இரண்டாவது கணவர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம்.

அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார்.

அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது. இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாடிய அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவரின் கணவர் தினேஷ் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் எப்படியாவது ரசித்த விடம் இணைந்து விட வேண்டும் என்று தீர்க்கமாக எண்ணிணார். அதேபோல் பிக்பாஸ் 7ல் கலந்த அவரது முன்னாள் கணவர் தினேஷுடன் இனி சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதை ரச்சிதா தனது பதிவுகள் மூலம் மறைமுகமாக உணர்த்திவந்தார். மேலும் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மிரட்டல் விடுப்பதாகவும் ஆபாசமாகப் பேசுவதாகவும் தினேஷ் மீது போலீஸில் புகாரும் தந்திருந்தார் ரச்சிதா.

இந்நிலையில் பிக் பாஸ் நிறைவடைந்தது. தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது இடம் பிடித்தார். அதே நேரம் மக்கள் மத்தியில் நற்பெயரையும் எடுத்துள்ளார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார். அதில், ”நான் உள்ளே போகும் போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்ற நம்பிக்கையில் தான் சென்று இருந்தேன். டைட்டில் வென்று என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என நான் ஆசையோடு உள்ளே போனேன்.

ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது. இதற்கும் மேலும் ரச்சிதா மனம் மாறுவார் என சொல்ல முடியவில்லை. ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளே இருந்து கொண்டு இருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாக இருக்கிறது. இதற்கும் மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் ரஷிதா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷிதா தற்போது கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். அந்த படம் வெளிவந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார். அதாவது கன்னட பட இயக்குநரை திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பாக ரச்சிதா பதில் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பலரும் தினேஷை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.