வாய்ப்பு கேட்டு வந்த பெண்களை மடக்கிய தீனா… அட சாக்கடையை விட கேவலமாக இருக்கே இவருடைய செயல்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களின் வரிசையில் தீனாவும் ஒருவர். இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, பயணம், மெட்டிஒலி போன்ற பல்வேறு சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். 2001 இல் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் படத்திற்கு இசையமைத்த இவர், அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைத்தார்.

இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான மயில்வான ரங்கநாதன் தீனா பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். தீனா இப்படிப்பட்ட ஆளா என்று யோசிக்கும் அளவிற்கு பயில்வாள் ரங்கநாதன் இதுவரை வெளி வராத பல விஷயங்களை போட்டு உடைத்துள்ளார். இசையமைப்பாளர் தீனா தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக சுமார் நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார்.

இந்நிலையில் சங்கத்தின் அடுத்த தலைவரை நியமிப்பதற்காக அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. சங்கத்தின் விதிகளின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும். ஏற்கனவே தீனா இரண்டு முறை தலைவராக பதவியேற்ற நிலையில், தற்போது இந்த தேர்தலிலும் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருக்கிறார். இது திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.மேலும் தீனா சங்கத்தில் மோசடி செய்வதற்காக தான் இவ்வாறு போட்டியிட்டுள்ளார் என்று கங்கை அமரன் கடுமையாக சாடி இருந்தார்.

இப்படியான சூழலில் பயில்வான் ரங்கநாதன் தீனா பற்றி கூறியதாவது: “தமிழ்நாடு திரை இசை கலைஞர்கள் சங்க கட்டடம் கட்டுவதற்கு பணம் கொடுப்பதாக இளையராஜா கூறினார். ஆனால் தீனாவின் நடவடிகைகள் சரியில்லாததால் அந்தப் பணத்தை இளையராஜா தரவில்லை. சங்கத்தில் தீனா செய்த மோசடிகளை தெரிந்து கொண்ட கங்கை அமரன் காறி துப்பிவிட்டார். இதனை கேட்ட பிறகு தனக்கு பதவியே வேண்டாம் என்று தீனா போயிருக்க வேண்டும். தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு போவார்.

அவரது சொந்த வாழ்க்கை சாக்கடையை விட மோசம். ஆரம்பத்தில் இவர் இசையமைக்கும்போது இவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை தன் வசப்படுத்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். ஆனால் தீனா அவர்களை சரியாக கவனிக்கவில்லை என்று முதல் மனைவி அவரிடம் இருந்து விலகிவிட்டார்.

அதோடு தீனா நிற்கவில்லை. அதற்கு பிறகு பாடல் பாட வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணையும், ஒரு இஸ்லாமிய பெண்ணையும் மடக்கிப்போட்டுவிட்டார். பகலில் ஒரு பெண், இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார் தீனா. வேறு வழியில்லாமல் அவருடன் அந்த இரண்டு பெண்களும் வாழ்ந்துவருகிறார்கள். தீனா சரியான பொம்பளை பொறுக்கி” என்றார்.