பிக் பாஸ் அர்ச்சனா மீது கை வைத்த வைரமுத்து…. சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் அர்ச்சனா…

0
Follow on Google News

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. விறுவிறுப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 இன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. எனவே இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த சீசனில் பல போட்டியாளர்கள் பங்கேற்று டாஸ்க்களை சிறந்த முறையில் செய்திருந்தாலும், விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.அதுமட்டுமில்லாமல், அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்த புல்லி கேங்கை அர்ச்சனா எதிர்கொண்ட விதம் ரசிகர்களை ஈர்த்தது. ஒட்டுமொத்த பிக் பாஸ் நேயர்களின் கவனத்தையும் அர்ச்சனா தன்வசப்படுத்தினார்.

இப்போது பிக் பாஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அர்ச்சனா குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு ரகசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அர்ச்சனா பற்றி அவர் கூறியது தற்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் vJ ஆக பணியாற்றியவர் தான் அர்ச்சனா. இவர் ஒரு முறை நடிகர் கலையரசனின் மனைவியின் ஜவுளி கடைக்கு சென்ற போது கலையரசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். ராஜா ராணி 2 சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படி படிப்படியாக பிரபலமாகி தற்போது டைட்டில் வின்னர் பட்டத்திற்கு தகுதியானவராக மாறி நிற்கிறார். இப்படியான நிலையில், அர்ச்சனா குறித்த ரகசிய தகவல் ஒன்றை பகிர்ந்து செய்யார் பாலு பகீர் கிளப்பி உள்ளார். அர்ச்சனா குறித்து அவர் கூறியிருப்பதாவது,

“சுமார் ரெண்டு வருடத்துக்கு முன்னர் கவிப்பேரரசு வைரமுத்து உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் வைரமுத்து அர்ச்சனாவின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்வது போல் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த பாடகி சின்மயி, “அவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும். வைரமுத்துவை பார்க்க செல்லும் போது தனியாக செல்ல வேண்டாம்..” என்று போஸ்டின் கீழே கமெண்ட் செய்திருந்தார்.

உடனடியாக அந்த கமெண்ட் டெலிட் செய்த அர்ச்சனா, “ நான் இந்த பதிவை போட்டதற்கு முக்கிய காரணம் என் தந்தை தமிழ் பேராசிரியர். எங்களுடைய குடும்பம் தமிழ் பற்று கொண்டது. வைரமுத்துவின் பாடல் குடும்பத்தினருக்கு மிகவும் பிடிக்கும். என்று பதில் தெரிவித்திருந்தார். அதே சமயம், “எனக்கு சின்மயி அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது.. இந்த உலகில் ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிடுவார்கள் ..

இப்படியான நேரங்களில் ஊறு வாயை நம்மால் அடைக்க முடியாது … இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட். இதை புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும்” என்றும் சின்மையின் கமெண்டுக்கு பதில் கொடுத்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். அர்ச்சனா குறித்து செய்யாறு பாலு வெளியிட்ட இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.