ஜாக்கி சானை வைத்து அந்நியனை ரீமேக் செய்யப்போறேன்… ஷங்கருக்கு போட்டியாக அறிவித்த தயாரிப்பாளர்!

0
Follow on Google News

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் படத்தின் கதை உரிமை சம்மந்தமாக அவருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் நடிப்பில் வெளியான திரைப்படம்.

அந்த படம் அப்போது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றாலும், காலம் செல்ல செல்ல பல விதமான கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானது. இந்நிலையில் இப்போது தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத ஷங்கர் இந்தியில் அந்த படத்தை ரண்வீர் சிங்கை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார். இந்த ரீமேக் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அந்நியன் படத்தின் கதை உரிமை தன்னிடமே உள்ளது என்றும் தன் அனுமதி இல்லாமல் அதைப் படமாக்க முடியாது என்றும் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முட்டுக்கட்டைப் போட்டுள்ளார். மேலும் இப்போது அந்நியன் ரீமேக்கை சீனாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சான் மற்றும் ஒரு பாலிவுட் நடிகரை வைத்து ரீமேக் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அந்நியன் படத்தின் ரீமேக் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.