பிக் பஸில் fatman ரவீந்திரன்  Eviction- … என் கணவர் பாவம்.. கண் கலங்கிய மனைவி மஹாலக்ஷ்மி…

0
Follow on Google News

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒரு வித்தியாசமான கேரக்டர் உள்ளே இருப்பார்கள் முதல் சீசனில் சினேகன், பெண் ஆண் என யாரை பார்த்தாலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து விடுவார், இது அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை, காரணம் கமல்ஹாசன் தான் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை சினிமா மூலம் அறிமுகப்படுத்தியவர், அந்த வகையில் சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம் அப்போது மிகப்பெரிய அளவில் ட்ரோல் ஆனது.

அதேபோன்று அதற்கு அடுத்த சீசனில் மகத் ஏற்கனவே அவருக்கு காதலி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு யாஷிகா மற்றும் அதன் இருவரும் பிக் பாஸ் வீட்டில் நெருக்கமாக பழகியது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. அதேபோன்று கடந்த சீசனில் அசல் கோளாறு என்பவர் எப்ப பார்த்தாலும் பெண்கள் மத்தியில் தான் அமர்வார், பெண்களிடம் தான் பேசுவார், அதேபோன்று தற்பொழுது ஒரு கேரக்டர் பிக் பாஸ் சீசனில் உள்ளே வந்துள்ளது.

அவர்தான் ஜெஃப்ரி தற்போது ஜெஃப்ரிக்கு அசல் கோளாறு போன்று கன்டென்ட் பிக் பாஸில் கொடுக்கப்பட்டுள்ளதா.? காரணம் தொடர்ந்து அசல் கோளாறு கடந்த சீசனில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதே தான் தற்பொழுது ஜெப்பிரி செய்து கொண்டிருக்கிறார். பெண்களிடம் மட்டுமே பேசுகிறார். இனி போக போக என்னென்ன கண்டன்டு எல்லாம் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

இதனைத் தொடர்ந்து பேட்மேன் ரவீந்திரன் தான் பிக் பாஸ் மிகப் பெரிய கன்டென்ட் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரை முதல் நாளிலே டாஸ் கொடுத்து சுருண்டு விழுக வைத்து விட்டார்கள், ஓடவிட்டு நொங்கு எடுத்து, இரவில் அவர் தூங்க முடியாமல் துடித்து பின்பு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சில மருந்துகள் கொடுத்து அவரை தூங்க வைத்தார்கள்.

பொதுவாகவே ரவீந்திரன் ஒரு நல்ல தயாரிப்பாளர் அவர் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தில் நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்று சினிமாவில் வந்து பல கோடி இழந்தார். பின்பு பண மோசடி என சிறைக்கு சென்றார். இதற்கு இடையில் அவர் மகாலட்சுமியை திருமணம் செய்தது மிகப்பெரிய சர்ச்சையானது. இப்படி ஆல்ரெடி பிரபலமான ரவீந்திரன் அவருடைய உடல்நிலை கருத்தில் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அவருடைய மனைவி ரவீந்திரனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ரவீந்திரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது ரவீந்திரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படும் அவதியை பார்த்து தயவுசெய்து என்னுடைய கணவரை எவிக்சன் பண்ணி வெளியே அனுப்பி விடுங்கள் என்று கண்கலங்கும் அளவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார் மகாலமகாலட்சுமி என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விரைவில் ரவீந்திரனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரவீந்திரன் தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.மேலும் பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம், சீரியஸான சண்டைகள், கலகலப்பான காமெடிகள் எல்லாம் நிறைந்திருக்கும்.

அது மட்டுமில்லாமல் காதலும் இருக்கும் அந்த வகையில் கவின் – தர்ஷன் – லோஸ்லியா இவர்கள் எல்லாம் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் இரண்டில் ஒரு ஃபன் ஆக கலகலப்பாக இருந்தது. அதேபோன்று தற்பொழுது ஜாக்ளின் – சவுந்தர்யா – ஜெஃப்ரி இவர்களெல்லாம் ஒரு குழுவாக செயல்படுவது ஒரு கலகலப்பாக இருக்கிறது இன்னும் போகப்போக எந்த அளவுக்கு கலகலப்பாக இருக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here