கே.ஜே.யேசுதாஸ் சாபம்..! என் குடும்பத்தை நாசம் செய்த தனுஷை ஆண்டவன் கேட்பான்.! என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

திருமணம் முடிந்த நடிகைகள், நிச்சயம் முடிந்த நடிகைகள் என இவர்கள் வாழ்க்கையில் சடுகுடு விளையாடி அந்த நடிகைகள் வாழ்க்கையை மட்டும் நாசம் செய்யாமல், சம்பந்த பட்ட நடிகை திருமணம் செய்த குடும்பத்தின் கௌரவத்தையும் நாசம் செய்து அந்த குடும்ப தலைவர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியவர் தான் நடிகர் தனுஷ் என கூறப்படும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும் என கூறபடுகிறது.

இந்நிலையில் தனுஷ் சக நடிகைகள் வாழ்க்கையில் மட்டும் சடுகுடு விளையாடிய வரிசையில் அவரின் மனைவியின் தங்கை சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்வதற்கு காரணம் கூட தனுஷ் தான் என கூறப்படும் நிலையில், மிக கெளரவமாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் குடும்பத்திலும் நுழைந்து தனுஷ் தனது சேட்டைகளை காண்பித்து அந்த குடும்பத்தையே நாசம் செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் இவரும் பிண்ணனி பாடகராக இருந்து வருகின்றவர், நடிகர் தனுஷ் உடன் நெருங்கிய நண்பரான விஜய் ஜேசுதாஸ் மிக நெருக்கமான குடும்ப நண்பர்களாக வலம் வந்தனர், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இந்த இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். நண்பன் தனுஷ் மீது உள்ள நம்பிக்கையில் மனைவி தர்ஷனா அவருடன் பழகுவதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

ஆனால் நண்பன் மனைவி என்று கூட பார்க்காமல் மிக பெரிய துரோகத்தை கே.ஜே.யேசுதாஸ் குடும்பத்துக்கு செய்துள்ளார் தனுஷ். அவர் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படப்பிடிப்பை காண படப்பிடிப்பு தளத்துக்கு அடிக்கடி வந்துள்ளார் தர்ஷனா, அப்போது அந்த படத்தின் வில்லன் நடிகர் அமிட்டாஸ் பிரதான் உடன் நெருக்கி பழங்குவதற்கு தனுஷ் உதவி செய்துள்ளார், ஒரு கட்டத்தில் அமிட்டாஸ் பிரதான் மற்றும் தர்ஷனா நெருக்கம் அதிகமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் பிடித்து கொண்டால், இருவரும் யாருக்கு என்ன பிரச்சனை, இருவரும் இணைந்து வாழட்டும் என இருவரையும் வாழ்த்தி அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஆதரவாகவும் இருந்துள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஜய் யேசுதாஸ்க்கு தெரியவர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் யேசுதாஸ் – தர்ஷனா தம்பதியினர் நிரந்தரமாக பிரிந்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்பு அமிட்டாஸ் பிரதான் உடன் இணைந்துள்ளார் தர்ஷனா. இந்த விவகாரம் குறித்து தனுஷை தொடர்பு கொண்டு தனது வேதனையை விஜய் யேசுதாஸ் வெளிப்படுத்திய போது, அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவர் விரும்பும் போது நாம என்ன செய்ய முடியும் என தனுஷ் பதிலளித்துள்ளார். இதன் பின்பு கூடா நட்பு கேடாய் முடியும் என உணர்ந்த விஜய் யேசுதாஸ் தனுஷ் உடனான நட்பை முறிந்து கொண்டதாக கூறப்படும் நிலையில்,

இதனால் மனம் வேதனையடைந்த விஜய் யேசுதாஸ் தந்தை கே.ஜே.யேசுதாஸ் நன்றாக இருந்த எனது குடும்பத்தை நாசம் செய்த தனுஷ் அந்த ஆண்டவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், பல குடும்பங்களை நாசம் செய்த தனுஷ் தற்போது அவரது மனைவியை விட்டு பிரிந்துள்ளது குறித்து, இது தான் கர்மா என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.