பிக் பாஸில் வெளியேறியதும் ஜோவிகா சினிமா என்ட்ரி … தமிழ் சினிமாவில் அடுத்த 20 வருசத்துக்கு இனி ஜோவிகா தான்…

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை விறுவிறுப்புக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இப்போது அவர் நுழையப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற ஜோவிகா, அம்மா வனிதா விஜயகுமார் போலவே, துணிச்சலாக பேசி பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்.

வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்றவற்றில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும் இப்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கே கொடுக்கப்பட்ட டாஸ்க்களை செய்து வந்தார்.

மேலும், அவ்வப்போது பிரதீப், விசித்ரா போன்ற சக போட்டியாளர்களுடன் சரிக்கு சரியாக சண்டையும் போட்டு கொண்டிருந்தார். குறிப்பாக கல்வி குறித்து விசித்ராவிடம் இவர் செய்த வாக்குவாதங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இருப்பினும், பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து மனதில் பட்டதை போல்டாக பேசி வந்தார். இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி 64 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பங்கேற்று வந்த ஜோவிகா, 60 நாட்களே கடந்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். மேலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அதிக அளவில் சம்பளம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது அவருக்கு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்று சம்பளமாக பேசப்பட்ட நிலையில், அவர் பத்து வாரங்களை தாண்டி இருப்பதால் மொத்தம் 20 லட்சம் சம்பளமாக பெற்று வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை ஓரளவு என்டர்டெய்ன் செய்து வந்த ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இப்படியான நிலையில், ஜோவிகா அடுத்ததாக தன் கனவை நோக்கி சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் நடிகையாக இல்லாமல், உதவி இயக்குனராக பணிபுரிய உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ஜோவிகாவிற்கு இப்போது வயது 18 தான் ஆகிறது. இன்னும் இந்த இண்டஸ்ட்ரியில் 20 வருடங்களாக ஜோவிகாவால் இருக்க முடியும். அப்படிபார்த்தால் ஜோவிகாவும் திரிஷா, நயன்தாரா போல வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்த வனிதா ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.