பெத்த தாய் என்று கூட பார்க்காமல் வனிதா மகன் செய்த செயல்… கதறி அழுத வனிதா விஜயகுமார்…

0
Follow on Google News

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றாலே அது வனிதா விஜயகுமார் தான். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று திருமணம் செய்து கொண்டு, தற்போது அனைவரையும் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதா விஜயகுமாருக்கும், நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000 ஆண்டு முதலில் திருமணம் நடைபெற்றது. ஆனால் வனிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு இவர்களுக்குள் விவாகரத்து ஆனது.

இவர்களுக்கு விஜய் ஶ்ரீ ஹரி என்ற ஒரு மகனும், ஜோவிகா என்ற ஒரு மகளும் பிறந்தனர். விவாகரத்துக்கு பிறகு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதா பிரிந்து வாழ்ந்து வந்தார். பிறகு இரண்டாவதாக ஆனந்த் ஜெயராம் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வெடிக்க 2012ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இந்த திருமணத்தின் போது இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு மூன்றாவதாக டேன்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் லிவ்விங் டுகெதரில் இருந்தார், ஆனால் அந்த உறவு திருமணத்திற்கு முன்பே முறிந்துவிட்டது. கடைசியாக பீட்டர் பால் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து அதே வருடம் அவரை விட்டு பிரிந்தார். மேலும் உடல்நலக்குறைவு காரணமாக பீட்டர் பால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி கல்யாணத்திற்கு பஞ்சமே இல்லாமல் திருமணம் செய்து சுத்திய வனிதாவை தான், அவர்களது குடும்பமே ஒதுக்கி வைத்திருப்பது போல, அவர் பெற்ற மகனும் ஒதுக்கு வைத்திருக்கிறார். வனிதா விஜயகுமாரின் மகன் குழந்தையாக இருந்த போதே, அம்மாவிடம் செல்ல மாட்டேன் என முடிவெடுத்து அம்மாவை உதறி தள்ளிவிட்டார்.

அதன் பிறகு தான் இவர், தனது தந்தையின் அரவணைப்பிலும், தாத்தாவின் கண்காணிப்பிலும் வளர்ந்து வருகிறார். மேலும் ஒருமுறை விஜயகுமார் தனது பேரனுடன் ஏர்போர்ட் சென்ற போதும் வனிதா தன் மகனை தன்னோடு அழைத்து செல்ல கைகளை பிடித்து இழுத்து தகராறும் செய்திருந்தார். அப்போதும் அவர் மகன், வனிதாவோடு செல்லவில்லை.

அதே போல் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஜய் ஶ்ரீ ஹரி வெளியிட்ட புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு, அவர் வனிதாவின் மகன் இல்லை, ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார். அப்போதே பலரும் விஜய் ஹரி வனிதாவை சுத்தமாக வெறுத்து விட்டார், அதாவது வனிதாவால் தொடர்ந்த அவமானம் மட்டுமே மிஞ்சும் என இவரின் குடும்பம் எப்படி வனிதாவை ஒதுக்கியதோ, அதேபோல்தான் தற்போது வனிதாவின் மகனும் அம்மாவை ஒதுக்கி விட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வனிதாவின் மகனான விஜய் ஶ்ரீ ஹரி, பிரபு சாலமன் இயக்கக்கூடிய மேம்பு என்ற படத்தின் மூலம் முதல்முறையாக சினிமா உலகில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்த படம் தான் உலகிலேயே முதன்முதலாக உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், இந்த படத்திற்கான ஆர்வமும் மக்களிடையே அதிகளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் இந்த படத்தின் டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியின் போது வனிதா விஜயகுமாரின் மகனும், விஜயகுமாரின் பேரனுமான விஜய் ஶ்ரீ ஹரி, தன் அம்மாவை அழைக்காமல் தாத்தாவோடு மட்டும் வருகை தந்திருந்தார். இதனை பார்த்த வனிதா, தன் மகன் தன்னை கண்டு கொள்ளாததை பார்த்து, எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கண் கலங்கி எமோஷனலாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.