என் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு… காரணமே அப்பா தான்… கண்கலங்கிய வனிதா விஜயகுமார்…

0
Follow on Google News

நடிகர் விஜயகுமார். 1969இல் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் முடித்த விஜயகுமார், மீண்டும் 1976 இல் நடிகை மஞ்சுளாவை காதலித்து மணம் முடித்தார். முதல் மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகளும் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு வனிதா பிரீத்தா ஸ்ரீதேவி என மூன்று மகள்களும் இருக்கிறார்கள். நடிகை மஞ்சுளா கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே தற்போது சென்னையில் முதல் மனைவியுடன் விஜயகுமார் வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பத்தில் கவிதா, அனிதாவை தவிர அருண் விஜய், வனிதா, பிரீத்தா ,ஸ்ரீதேவி ஆகிய நான்கு பேரும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் விஜயகுமாரின் மகள் வழி பேத்தியான தியாவிற்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம்,மெஹந்தி, பந்தக்கால் நடுதல் என அனைத்து நிகழ்ச்சிக்கும் விஜயகுமாரின் மிகப்பெரிய குடும்பம் ஒன்று கூடி திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்.

ஆனால் வனிதா விஜயகுமார் இதில் கலந்து கொள்ளவில்லை, வனிதா திருமண வாழ்க்கை சர்ச்சைக்குரிய வகையிலேயே இருந்துள்ளது. இருப்பினும் எந்த விமர்சனங்களையும் காதில் போட்டுக் கொள்ளாத வனிதா தனி ஒரு ஆளாக தன் மகள்களை வளர்த்து வருகிறார். வனிதாவிற்கு அப்பா அண்ணன் அக்கா தங்கைகள் என எல்லோருமே இருந்தும், தனியாகவே தனியாகவே தனது அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

இதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன்பு வனிதாவுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தான். அந்த தகராருக்கு பின்னர் விஜயகுமார் மட்டும் இன்றி வனிதா உடன் பிறந்த சகோதர சகோதரிகளும் வனிதா உடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாமல் போய்விட்டார்கள்.

இப்படியான சூழலில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த வனிதா, தனது அப்பா மற்றும் அண்ணன் தங்கைகள் பற்றி ஆதங்கத்துடன் பேசி இருந்தார்.என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி சொல்லி இருந்தார். அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் பிரீத்தா, ஸ்ரீதேவி என்று பேசி இருக்கிறார்.

நான் அந்த வீடியோவை குறைந்தது பத்து முறையாவது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி பார்த்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பது போல பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் என்னுடைய அப்பா என்னுடைய பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சம் உள்ள எல்லார் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் வேண்டுமானால் என்னை அவரது பிள்ளையாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உலகம் அதை எப்போதும் ஏத்துக்காது, அதனால்தான் இன்று வரை என்னை அனைவரும் வனிதா விஜயகுமார் என்று அழைக்கிறார்கள். ஒருவேளை நான் முதல் கல்யாணம் முடியும்போது வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால் தொடர்ந்து எத்தனை முறை என்னுடைய பெயர் மாறியிருக்கும்..? என்று சிரித்தபடியே வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதோடு உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய அப்பா பேச்சை கேட்ட பிள்ளை என்றால் அது நான் மட்டும்தான். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு.ஆனால், என்னை மட்டும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டார்கள். என்று வனிதா சற்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது பழைய வீடியோ என்றாலும், விஜயகுமார் பேத்தி திருமணத்தில் வனிதாவை ஒதுக்கி வைத்து விட்டு குடும்பமே ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில் இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.