நயன்தாரா அவசர பதிவு திருமணம் செய்ய இது தான் காரணம்.. பாண்டிச்சேரில் நள்ளிரவில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகே, முக்கிய பிரமுகர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த பின்பு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தாய்லாந்து ஹனிமூன் சென்றவர்கள், பின்பு மும்பையில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார்.

இதன் பின்பு இரண்டாம் சுற்று ஹனிமூனை தொடங்கிய நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஸ்பெயின் பாரீஸ் என செம ஜாலியாக சுற்றி வந்தனர். நயன்தாரா திருமணம் முடிந்து குழந்தை பெற்று கொள்ள இருப்பதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற தகவல் ஓன்று சுற்றி வந்த நிலையில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தீடிரென அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

திருமணம் முடிந்து எப்படி நான்கு மாதத்தில் குழந்தை பிறக்கும் என்கிற பலரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தகவலை தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய சட்டத்தை பின்பற்றி தான், இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்களா, என்கின்ற விசாரணையை அரசு கையில் எடுத்தது.

இதில் 2016 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தான் வாடகை மூலம் குழந்தை பெற்று கொண்டதாக நம்பப்படுகிறது. 2014ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நெருங்கி பழக தொடங்கினார்கள்.

ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் தோல்வி கண்ட நயந்தாரா, மூன்றாவது காதலில் மிகவும் கவனமாக இருந்தார். 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படம் வெளியானது. 2016 ஆம் ஆண்டு இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தற்பொழுது தெரியவந்துள்ளது. ஆகையால் காதலித்து மிக குறுகிய காலத்தில் எந்த ஒரு நம்பிக்கையில் விக்னேஷ் சிவனை நயன்தாரா பதிவு திருமணம் செய்து கொண்டார் என்பது பற்றி விசாரித்தோம்.

அதில், பாண்டிச்சேரி நானும் ரவுடிதான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நயன்தாராவுக்கு திடீரென்று குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே விக்னேஷ் சிவன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நான்கு நாட்கள் வரை ரத்து செய்துவிட்டு. நயன்தாரா கூடவே இரவு பகல் என இருந்து தைலம் தேய்த்து விடுவது, மாத்திரை கொடுப்பது போன்ற அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வைத்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தன்னை ஒரு தாய் போன்று அக்கறையுடன் கவனித்து வந்ததை தொடர்ந்து, முழுமையாக நம்பிய நயன்தாரா, இதன் பின்பு தன்னுடைய காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தான் கடந்த 2016ம் ஆண்டு முகூர்த்த தேதியில் ஜாதகம் பொருத்தம் பார்த்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.