எண்ணெய் கிணறு முதல் ரியல் எஸ்டேட் வரை.. கோடி கோடியாக அள்ளி குவிக்கும் நயன்தாரா..

0
Follow on Google News

நயன்தாரா சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே, ஆரம்பத்தில் இருந்தே பல தொழில்களில் முதலீடு செய்ய தொடங்கினார், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்கள் தயாரித்தனர், மேலும் சினிமாவை தாண்டி நயன்தாரா தொழில் ரிதியாக முதலீடு செய்துள்ளார்.

மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் நயன்தாரா இணைந்து தி லிப் பார்ம் கம்பெனி என்னும் காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்திவருகிறார். இது முழுக்க முழுக்க பெண்களுக்கான லிப் ஸ்டிக்கை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் . இதன் பிராண்ட் அம்பாசிட்டராகவும் நயன்தாரா இருந்து வருகிறார்.

அதே போன்று ஃபிபோலா ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் நிறுவனத்திலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் பிரபலமான சாய் வாலே தேநீர் விற்பனை கடையில் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து முதலீடு செய்திருக்கின்றனர்.

இப்படி சில கோடியில் பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா. துபாயில் தளமாகக் கொண்ட ஒரு புதிய எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் துபாயில் உள்ள எண்ணெய் வணிகத்தில் இந்த முதலீடு செய்த நயன்தாரா, தன்னுடைய துபாய் முதலீட்டை சகோதரர் பொறுப்பில் விட்டுவிட்டாராம், நயன்தாராவின் சகோதரர் ஏற்கனவே பல வருடங்களாக துபாயில் முதலீடு செய்து பெரும் லாபத்தை சம்பாரித்து வருகின்றவர்,

அந்த வகையில் தன்னுடைய சகோதரரின் ஆலோசனையின் படியே துபாயில் சுமார் 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா. திருமணத்திற்கு முன்பே நயன்தாரா துபாயில் முதலீடு செய்யும் நிறுவனத்தில் தன்னையும் ஒரு பாட்னராக நயன்தாரா இணைப்பார் என எதிர்பார்த்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். நயன்தாரா அதை செய்யவில்லை மேலும் நயன்தாரா துபாய் தொழிலை அவரது சகோதரர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது,

இப்படி பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா மாதத்திற்கு சுமார் பல கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது, அந்த வகையில் நயன்தாரா சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்க கோடி கோடியாக கொட்டோ கொட்டு என கொட்டுகிறது அவர் முதலீடு செய்துள்ள தொழில்கள். மேலும் தனக்கு கிடைக்கும் லாபத்தில் வரும் பணத்தில் மேலும் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வரும் நயன்தாரா. தற்பொழுது பொருளாதார பிரச்சனையால் மூடப்பட்டு வரும் பழைமை வாய்ந்த திரையரங்குகளை வாங்கி புதுப்பிக்கும் வேளைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வட சென்னையில் உள்ள பழைய திரையரங்கு ஒன்றை விலைக்கு வாங்குவதற்கு நயன்தாரா தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்த தியேட்டரை வாங்கி, அந்த இடத்தில் ஒரு மல்டி பிளக்ஸ் தியேட்டரை கட்ட நயன்தாரா முடிவு செய்துள்ளதாகவும், இதே போன்று தமிழகத்தில் பல இடங்களில் விற்பனைக்கு வரும் தியேட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ள நயன்தாரா, சொந்தமாக இடமும் வாங்கி அதில் புதியதாக மல்டி பிளக்ஸ் தியேட்ட்ர் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக முழு வீச்சில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.