நடிகை நயந்தாரா அட்ராசிட்டி…. டெலிவரி பாய் முதல் ஆட்டோ காரர் வரை யாரையும் விட்டு வைக்கல….

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை நயந்தாரா திருமணம் செய்து கொண்ட பின்பு, அவருடைய சினிமா மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில் புதிய படங்களில் கமிட்டாகி வரும் நயன்தாரா தான் குழந்தைகளுடன் சென்னையிலே இருக்க வேண்டி இருப்பதால் வெளியூரில் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன். சென்னையில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று கடும் கண்டிஷன் போடுகிறாராம்.

இந்நிலையில் சினிமாவில் மட்டும் தான் இப்படி அட்ராசிட்டி செய்கிறார் நயன்தாரா என்றால் அவர் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் மற்றவர்களுக்கு மிக பெரிய டார்ச்சராக அமைத்துள்ளார் நயன்தாரா. சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் நயன்தாரா, அங்கே இருக்கும் ஸ்விமிங் பூல் அருகே தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்து விளையாடி கொண்டிருந்துகிறார்.

அப்போது அதே அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் சிறுவர்கள் அந்த நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்துள்ளார்கள், அப்போது புகைப்படம் எடுத்தும் மகிழ்துள்ளார்கள், அப்போது புகைப்படம் எடுத்த போது நயன்தார குழந்தையுடன் இருப்பதையும் புகைப்படம் எடுத்துள்ளார்கள், அதாவது நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்தவர்களை புகைப்படம் எடுக்கும் போது, அங்கே இருந்த நயன்தாராவும் புகைப்படத்தில் விழுந்துள்ளார்.

இதை பார்த்த நயன்தாரா உடனே அங்கிருந்த சிறுவர்களிடம் போனை பிடுங்கி எடுத்து புகைப்படத்தை டெலீட் செய்து திரும்ப கொடுத்துள்ளார், இதனால் மனம் உடைத்த அந்த சிறுவர்கள், என்ன இந்த ஆண்டி இப்படி செய்கிறார்கள் என மனம் உடைந்து வீட்டில் உள்ள பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர்களும் இது மாதிரி பல தடவை இந்த குடியிருப்பு நல சங்கத்திடம் புகார் கொடுத்தாச்சு, ஒரு பயனும் இல்லை புலம்பி உள்ளனர்.

மேலும் நயன்தாரா குடியிருக்கும் அடுக்கும் மாடி குடியிருப்பில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு அவர் பயன்படுத்த கூடிய சுமார் 50க்கு மேற்பட்ட செருப்பு வரிசையாக வைக்கப்பட்டு, அவருடைய வீட்டின் பணியாளர்கள் அடிக்கடி வந்து அந்த செருப்பை துடைத்து வீட்டின் வெளியே வரிசையாக வைத்து விட்டு செல்கிறார்களாம், இதனால் நயன்தாரா வீட்டின் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள், இந்த செருப்பை வீட்டின் உள்ளே எடுத்து வைக்கலாமே என்று சொன்னாலும் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வீட்டுக்கு வெளியில் யாராவது தொலைபேசியில் சத்தமாக பேசினால் கூட, குழந்தை உள்ளே தூங்குது ஏன் இப்படி சத்தமாக தொலைபேசியில் பேசுகிறீர்கள் என சத்தம் போடுகிறாராம் நயன்தாரா, அதே போன்று, உணவு டெலிவெரி பாய், நயன்தாரா வீட்டின் பக்கத்து வீட்டுக்கு உணவு டெலிவெரி செய்ய வரும் போது, சார் உங்க வீட்டுக்கு வெளியே தான் நிற்கிறோம் கதவை திறங்க என்றால், நயன்தாரா கதவை திறந்து உள்ளே ஏன் சத்தமா தொலைபேசியில் பேசுகிறீர்கள் குழந்தைகள் உள்ளது என கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.

அது மட்டும் இல்லமல் தன்னுடைய இரண்டு மகன்கள் உடன் விளையாட நயன்தாரா கீழே வந்தால், அங்கே சவாரிக்காக எதாவது ஆட்டோ வந்தால், குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக வரீங்க என ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போடுகிறாராம் நயன்தாரா, இப்படி நயன்தாரா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் டெலிவரி பாய், முதல் ஆட்டோ டிரைவர் வரை அனைவரிடமும் சண்டை போடும் நயன்தாரா விரைவில் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு குடி எற போகிறாராம். அதனால் தற்பொழுது நயன்தாரா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், சீக்கிரம் நயன்தாரா இந்த வீட்டை காலி செய்து போயஸ் கார்டன் வீட்டிற்கு குடியேற வேண்டும் என பிராத்தனை செய்து வருவதாக கூறப்படுகிறது.