நடிகை அமலாபாலை படுக்கைக்கு அழைத்த முக்கிய பிரபலம்.. ஓட்டல் அறையில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

தற்பொழுது சினிமா வட்டாரத்தில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்பு பல முன்னணி நடிகர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மோகன்லால் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மலையாள சினிமா மட்டுமில்லாமல் பிற மொழி சினிமா நடிகைகளும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல்வேறு சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட நடிகைகள் பலர் மலையாள சினிமாவில் இதுபோன்று சம்பவங்கள் உள்ளதால் தான் அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ் சினிமாவிற்கு வந்தோம் என்று பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் பொதுவாகவே முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர்கள் இதற்கு முன்பு பின்னணி பாடகி சினிமயி தனக்கு ஒரு பாதிப்பு என்று தெரிவித்த போது அமைதியாக இருந்தவர்கள்.

தற்பொழுது மலையாள சினிமாவில் வெடித்துள்ள சர்ச்சைக்கு ஒவ்வொருவராக வந்து தாங்கள் சந்தித்த இதுபோன்ற தொந்தரவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் குஷ்பூ ஒரு பேட்டியில் தன்னை பிரபல தயாரிப்பாளர் ரூமுக்குள் வந்து தொந்தரவு செய்ய முற்பட்டபோது, தான் செருப்பை காண்பித்து விரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போன்று நடிகை ராதிகா நடிகைகள் பயன்படுத்தும் கேரவன் உள்ளே ரகசிய கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடித்து அதை மலையாள சினிமா துறையினர் தனியாக அமர்ந்து பார்த்து ரசிப்பதை பார்த்துள்ளேன் என தெரிவித்து பகீர் கிளம்பினார். மேலும் இதனை தொடர்ந்து தற்பொழுது அமல்பாலுக்கு இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் குறித்த நடந்த சம்பவம் வெளியாகி உள்ளது

அதாவது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அமலாபால் சென்றிருந்தபோது அங்கே அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் அமலாபாலிடம் இரவு டின்னருக்கு ரூமுக்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அமலாபாலை அழைத்துள்ளார் அந்த நிகழ்ச்சியின் மேனஜர், இதை கேட்டு கொந்தளித்த அமலாபால் அந்த மேனேஜரை அங்கேயே அடி அடி என்று வெளுத்து எடுத்து விட்டாராம்.

உடனே இந்த சம்பவம் குறித்து நடிகர் விஷாலிடம் தொடர்பு கொண்டு அமலாபால் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிகர் கார்த்திகை தொடர்பு கொண்டு நடந்துவற்றை தெரிவித்து அதன் பின்பு அமலாபாலை படுக்கைக்கு இரவு ரூம்புக்கு அழைத்த அந்த மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்ம் இந்த தகவலை விஷாலே தெரிவித்தவர் முதலில் யாராவது உங்கள் இடம் தவறாக நடந்து கொண்டால் செருப்பை கழற்றி அடிக்க வேண்டும்.

புதியதாக திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் குறித்தோ தொந்தரவுகள் இருந்தால் தயங்காமல் என்னிடம் வந்து சொல்லுங்கள் என விஷால் தெரிவித்துள்ளார், மேலும் நடிகை அமலா பால் அவரை படுக்கைக்கு அழைத்த மேனேஜரை அங்கேயே அடி அடி என அடித்ததாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.