ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட டீல்… தேவையே இல்லை என துரத்திவிட்ட தயாரிப்பாளர்.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாராவை பின்பற்றி தற்பொழுது நடிகைகள் போடும் கண்டிசன்களால் சினிமா தயாரிப்பாளர்களை கடும் கோபத்திற்கு ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நடிகை நயன்தாரா ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போவார். அந்த வகையில் 10 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா திருமணத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.

சம்பளம் அதிகமாக வாங்கும் நயன்தாரா மேலும் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பது போன்று,
படப்பிடிப்புக்கு வரும் நயன்தாராவுக்கு பாதுகாப்புக்காக பவுன்சர், மேலும் 10க்கு மேற்பட்ட உதவியாளர்கள் என இவர்களின் அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளரை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நயன்தாரா தங்குவதற்கான நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துடன் கூடிய கேரவன் வேண்டும் என இப்படி தயாரிப்பு அதிக சசெலவு வைக்க கூடியவர் நயன்தாரா.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு நயன்தாராவின் மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் நயன்தாரா இடத்தை பிடிப்பதில் நடிகைகள் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில் முன்னனி ஹிரோ தேதி கிடைக்காததால், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு இதற்கு முன்பு நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளை வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தயாரித்து வைத்தார்.

தற்பொழுது சமந்தாவை வைத்து ஒரு புதிய படம் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் சமந்தா திடீரென தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளார். ஆனால் படம் ஒப்பந்தம் செய்து கொண்ட போது இவ்வாறு அதிகம் சம்பளம் சமந்தா கேட்கவில்லை. தற்பொழுது நயன்தாராவுக்கு திருமணம் ஆகி விட்டதால் சமந்தா இவ்வாறு சம்பளம் உயர்த்தியதாக கூறப்படுகிறது. ஆனால் எஸ் ஆர் பிரபு தன்னால் இத்தனை கோடி சம்பளம் கொடுக்க முடியாது என சமந்தாவை படத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கிரேட் இந்தியன் கிச்சன் என்கின்ற படம் கடந்த இரண்டு வருடங்களாக விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. அதேபோன்று டிரைவர் ஜமுனா என்கின்ற படமும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் சீட் கேட்டு செல்லும் தயாரிப்பாளர்களிடம் 1.30 கோடி சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்.

மேலும் நயன்தாராவை பின்பற்றி தனி கேரவன், உதவியாளர் பவுன்சர் என ஏகப்பட்ட கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டு, இந்த டீல் ஓகே என்றால் கதை கேட்கிறேன் என்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள், நீ எங்க படத்தில் நடிக்கவே வேண்டாம் என துரத்தி விடுவதாக கூறப்படுகிறது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!