சும்மா கூப்பிட்டா வரமாட்டேன்.. முதலில் பணத்தை வை.. காரர் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. எந்த விசயத்துக்கு தெரியுமா.?

0
Follow on Google News

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்கிற படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கின்ற படம் திரைக்கு வருவது பலருக்கு தெரியாது, மேலும் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டு வருவது சினிமா ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது அந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய சர்ச்சை பேச்சு, இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை பெற்று தந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனாலும் ஒரு வகையில் இந்த படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது விளம்பரம் தான் என்கின்ற மகிழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் உள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்பு தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் பெரும் பஞ்சாயத்து நடந்துள்ள ஒரு தகவல் வெளியாகியுள்ளது.தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அந்த படத்தின் ஒருவகை பிரமோஷன் நிகழ்ச்சி. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அழைத்தபோது அவர் வர முடியாது என மறுத்துள்ளார்.

அதாவது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பள தொகையில் டிடிஎஸ் தொகை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பிடித்தம் செய்யப்படும் அதன் பின்பு அந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித்துறையினரிடம் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக கட்டுவார்கள். இதில் பல தயாரிப்பு நிறுவனம் நடிகர் நடிகைகளிடம் டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்துவிட்டு ஆனால் முறையாக வருமானவரித்துறை இடம் செலுத்துவது கிடையாது.

இதனால் நடிகர் நடிகைகளுக்குத்தான் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளத்தில் டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்து வருமான வரி துறையில் செலுத்தவில்லை, இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் என்னுடைய டிடிஎஸ் தொகையை வருமானவரித்துறையில் செலுத்துங்கள் அதன் பின்பு தான் உங்கள் படத்தின் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கரார் போட்டுள்ளார்.

ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படம் வெளியான பின்பு வரும் வசூலில் நாங்கள் டிடிஎஸ் தொகையை கட்டி விடுகிறோம் தற்பொழுது இந்த படத்திற்கு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்கள்.ஆனால் அதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியானால் பல தயாரிப்பாளர்கள் டிடிஎஸ் தொகை முறையாமல் கட்டுவது கிடையாது அதனால் நான் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றால் டிடிஎஸ் நோயைக் கட்டி கட்டினால் தான் வருவேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.

இருந்தும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேடம் கொஞ்சம் மனசு வைங்க என கேட்க, கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ், சும்மா கூப்பிட்டா வரமாட்டேன் முதலில் தேவையான பணத்தை வருமானவரித்துறையிடம் கட்டுங்கள் என்று காரராக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஐஸ்வர்யா ராஜேஷ் செலுத்த வேண்டிய தொகையை வருமான வரித்துறையில் செலுத்தியுள்ளார்கள். இதன் பின்பே ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.