தந்தை பார்முலா சரிவராது… சஞ்சய்யின் அதிரடியால் கலங்கி போய் இருக்கும் விஜய்…

0
Follow on Google News

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்கு, எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாத திறமையானவர்கள் பலரும் போட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் என திறமையே இல்லாவிட்டாலும், பிரபலங்களின் பிள்ளைகள் என்பதாலேயே எளிதாக சினிமாவில் நுழைந்து விடுவது பல தசாப்தங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்களில் ஒரு சில வாரிசு நடிகர்களே தங்களின் திறமையினாலும், நடிப்பினாலும் மக்களின் மனதில் இப்பவும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படத்தை இயக்க உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது பிலிம் மேக்கிங் படிப்பை கனடியன் யுனிவர்சிட்டியில் படித்து முடித்ததையடுத்து, தனது முதல் படத்தை இயக்குவதற்காக லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

ஆம், தன் அப்பா போல் ஹீரோவாக விரும்பாமால், தாத்தாவைப் போல இயக்குனராக விரும்பும் ஜேசன் சஞ்சய்க்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வாய்ப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளது. பல ஹிட் படங்களை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம், இப்போது ஜேசன் சஞ்சய் மூலம் பெரிய பலப்பரிட்சையை நடத்தப்போகிறது என்று கூறலாம்.

ஏனெனில், நடிகர் விஜய் சுமார் 9 வருடங்களாக லைக்கா நிறுவனத்திற்கு எந்த கால்ஷீட்டும் கொடுக்காமல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக, கத்தி படத்தில் இணைந்த லைக்கா விஜய் கூட்டணி, அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு பிரச்சினைக்கு பிறகு, இன்று வரை இந்த கூட்டணியில் படம் வெளியாகவில்லை. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படம் வெளியான பிறகு, ஆங்காங்கே பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.

விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக படம் வெற்றி பெறவில்லை. நடிகர் விஜய்யை நம்பி பல கோடிகளை கொட்டிக் கொடுத்த லைக்கா நிறுவனம் ஏமாற்றம் அடைந்தது. இதனாலேயே லைக்கா நிறுவனம் அதிருப்தியும் அடைந்துள்ளது. இந்த விஷயம் விஜய் காதுக்கு செல்லவே, இனி லைக்கா நிறுவனத்துடன் இணையக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளார்.

இவ்வாறே சுமார் ஒன்பது வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது வரை இந்த காம்போவில் படம் ஏதும் வெளியாகவில்லை. இவ்வாறு இருக்கையில், தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு லைக்கா நிறுவனம் கைகொடுப்பது, “தாய் பகை, குட்டி உறவு” என்பது போலத்தான் இருக்கிறது. மேலும், மகன் ஜேசன் சஞ்சய், அப்பா விஜய்யிடம் இது குறித்து கலந்தாலோசிக்கமலேயே நேரடியாக லைக்கா நிறுவனத்திடம் சென்றிருக்கிறாரோ என்றெல்லாம் இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சினிமாவில் பெரிய அனுபவம் ஏதும் இல்லாத ஜேசன் சஞ்சய்யை நம்பி லைக்கா நிறுவனம் படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது என்றால், இது கண்டிப்பாக லைக்கா நிறுவனத்திற்கு பலபரிட்ச்சைதான். ஏற்கனவே, விஜய்க்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே உட்பூசல் உள்ள நிலையில், இப்போது ஜேசன் சஞ்சய்யை நம்பி பெரிய பட்ஜெட்டை கொடுத்திருப்பது, நடிகர் விஜய்க்கு தயக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யை பொறுத்தவரை, ஜேசன் சஞ்சய் யாரிடமாவது அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி விட்டு, அதன் பின்னர் களத்தில் இறங்கி திறமையை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், ஜேசன் சஞ்சய் எடுக்கும் படம் ரசிகர்களுக்கு மட்டும் பிடித்து விட்டால் போதும், அவருக்கென தனி அடையாளத்தை பதித்துக் கொண்டு பல்வேறு அற்புதமான படைப்புகளை கொடுத்து அசத்தி விடுவார்.