விஜய் ஜாதகத்தில் பிரச்சனையையே அவர் அப்பா தான்.. விஜய் அரசியலுக்கு காத்திருக்கும் சவால்..

0
Follow on Google News

நடிகர் விஜய் ஜாதகத்தில், சனி பலன் மற்றும் செவ்வாய் பலம் இது இரண்டுமே ஒரு பக்கம் உள்ளது, அவருக்கு அஸ்தமன தோஷமானது அஸ்தமன யோகமாக மாறி உள்ளதால்ல் சனி மற்றும் செவ்வாய் இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்கு குரு பலன் என்பது மிக முக்கியம். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு குரு பலன் என்பது மிக குறைவாகவே இருக்கின்றது என ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.

குருபலன் விஜய் ஜாதகத்தில் குறைவாக இருப்பதால் வாக்கு வங்கியை குறிவைத்து நடிகர் விஜய் முன்னெடுக்கும் அரசியல்கள் அவருக்கு கைகொடுப்பதில் சிரமம் ஏற்படும், அதனால் தான் வாக்கு வங்கியை குறிவைத்து விஜய் முன்னெடுக்கும் சில நலத்திட்டங்கள் கூட மிக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது என சுட்டி காட்டும் ஜோதிடர்கள்.

ஒருவர் அரசியலுக்கு சனி பலன், குரு பலன், செவ்வாய் பலன் இந்த மூன்று பலனும் முக்கியமான தேவை.. ஆனால் நடிகர் விஜய்க்கு குரு பலன் இல்லாததால், அவர் குருவாக யாரை தன் அருகில் வைத்து வைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு அவர்களின் வழியில் விஜய் செயல்படும் போது, அப்படி விஜய்யை வழி நடத்த கூடிய அந்த ஜாதக பலத்தைப் பொறுத்து அவருடைய அரசியல் வளர்ச்சி அமையும்.

விஜய் குருவாக தன்னனுடன் இணைத்து கொண்டு அவர்களின் ஆலோசனை படி நடக்கும் போது, அந்த ஆலோசனை வழங்கும் ஜகாத்தை பொறுத்து, விஜய் முதல்வராவது, அல்லது எதிர்க்கட்சி தலைவராவது, அல்லது மிக குறுகிய காலத்தில் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி போன்று அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு அட்ரஸ் இல்லாமல் போவதும், அவர் குருவாக தன்னுடன் இனைத்து கொண்டவரின் ஜாதகப்படியே நடக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் குருவைப் பொறுத்தே, அதாவது அவருக்கு வரும் குரு பலனை பொருத்தே அவருடைய அரசியல் வாழ்வு தீர்மானிக்கப்படும் என்கின்றனர். அந்த வகையில் விஜயின் தந்தை SA சந்திரசேகர் மகன் அரசியலுக்கு குருவாக இருக்க முடியாத என்பது குறித்து விளக்கம் கொடுக்கும் ஜோதிடர்கள், விஜயின் ஜாதகத்தில் சூரியன் என்பது அப்பா, சூரியன், சனி, மாந்தி அதில் சனியானபட்டவர் அஸ்தமதோஷம் பட்டு யோகமாக மாறிவிட்டார்.

ஆனால் யோகமாக மாறினாலும் சூரியனுடன் சனி சேர்ந்ததால், அந்த சூரியனுடன் பகை பெற்று விட்டார், அப்படி பகை பெறும் பொழுது சூரியனான அவருடைய தந்தை மூலமாக மிக பெரிய வளச்சியை அடைவர், ஆனால் அவர் தந்தையை விட விஜய் மிக பெரிய இடத்திற்கு சென்ற பின்பு, விஜயின் ஜாதகப்படி சூரியனான தந்தை மகனுக்கு அறிவுரை சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே நேரத்தில் விஜய் ஜாதகப்படி அவருடைய தந்தை ஒரு குருவாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கின்றனர் ஜோதிடர்கள். அந்த வகையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிகர் விஜய்யும் கருத்து ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. தந்தை – மகனுக்கும் இடையிலான பாசம் அவர்களுக்குள் இருக்கலாம் ஆனால் இருவருடைய கருத்தும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கும் ஜோதிடர்கள்.

தற்பொழுது நடிகர் விஜய்க்கு சுக்கிர திசை உள்ளதால், சுக்கிர திசை இருக்கும் வரை அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருப்பார். சுக்கிர திசை முடிந்து அடுத்த ஆறு வருடம் அவருக்கு சூரிய திசை வருகின்றது, அப்போது அவர் முழுமையாக தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொள்வார். சூரிய திசை முடிந்து சந்திர திசை வரும் பொழுது அரசியலில் விஜய் ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கான சாத்தியம் உண்டு என்கிறார்கள் ஜோதிடர்கள்.