அண்ணே….மன்னிச்சுடுங்க…. பாலாவிடம் சரண்டரான சூர்யா..! இருவருக்கும் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கடைசி படம் எதற்கும் துணிந்தவன் படுதோல்வி, இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான தொடர்ந்து மூன்று படம் எதிர்பார்த்த வெற்றியை தர வில்லை, மேலும் பாலா குடும்பத்தில் பிரச்சனை, இந்த சூழலில் குடும்ப பிரச்சனையை முடித்து விட்டு தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கியுள்ளார் பாலா.

அதே போன்று கடந்த எட்டு வருடங்களில் திரையரங்குகளில் வெளியான சூர்யா படம் ஏதும் வெற்றி பெறவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்க இருக்கும் சூர்யா அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்த பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்து, அந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார், இந்த படத்தில் சூர்யா மனைவி ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

பாலா படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளை வாட்டி எடுத்துவிடுவார். பாலா பற்றி முழுமையாக அறிந்த நடிகர் சூர்யா, புதிய படம் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு சில கோரிக்கைகளை பாலாவிடம் தெரிவித்து படத்தில் நடிக்க தொடங்கினர். பாலாவும் உன்னை அந்த அளவுக்கு கஷ்ட படுத்த மாட்டேன் என உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் உள்ள கடல் நடுவில் நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கியது முதல், பாலாவின் வேலைகளில் சூர்யாவின் குறுக்கீடு அதிகமாக இருந்து வந்துள்ளது பாலாவுக்கு பிடிக்கவில்லை, இது பாலாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் பாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷூட்டிங் பாதியிலே பேக் அப் என்று சொல்லிவிட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை பறந்தார் சூர்யா.

இதனால் புதிய படம் பாதியிலே நின்றது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவியது, இது என்னுடைய படம் நான் சொல்வதை கேட்டு நடித்தால் படத்தை தொடங்குவோம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பதால் படம் பாதியிலே நிற்பது அவருக்கும் நஷ்டம் மேலும் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில்.

மீண்டும் படப்பிடிப்பு தொடங்க தாமதமானால், அடுத்து வடிவாசல் படத்தில் நடிப்பதில் கால் சீட் பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து, அண்ணன் பாலா என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று உறுதியளித்த சூர்யா, பின்பு பாலாவை தொடர்புகொண்டு படப்பிடிப்பில் இருந்தும் பாதியில் வந்ததற்கு சாரி அண்ணே.. என்று தெரிவித்து இருவரும் சமாதானமாகி உள்ள நிலையில் விரைவில் மீண்டும் பாலாவின் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?