நிம்மதியில்லை வீட்டை விட்டு வெளியேறுகிறார் ரஜினிகாந்த்… அண்ணனுடன் எங்கே செல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவில் முக்கிய பிரபலங்களில் விரல் விட்டு என்ன கூடியவர்களில் ஒருவர். பணம், புகழ் என உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் தவித்து வருகிறார். தனது வாலிப வயதில் ஒரு முன்னணி நடிகையை காதலித்து வந்த ரஜினிகாந்த், தனக்கு பிடித்த அந்த நடிகையை திருமணம் செய்ய முடிவு செய்த போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் கொடுத்த கடும் நெருக்கடியால் அந்த காதல் தோல்வியை தழுவியது.

இதன் பின்பு தான் காதலித்த காதலியின் பெயர் கொண்ட கல்லூரி மனைவி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை இருந்த நிலையில் திருமணம் முடிந்த சில வருடங்களில் குடும்ப வாழ்க்கையை வெறுத்த ரஜினிகாந்த் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை காதலிக்க தொடங்கியவர் மனைவி லதாவை விவாகரத்து செய்துவிட்டு அந்த நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக அந்த காலகட்டத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் குருநாதர் பாலச்சந்தர் தலையிட்டு, இரண்டு குழந்தைகள் நலன் கருதி மனைவி லதாவை விட்டு பிரிய கூடாது என அறிவுரை கூற, மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்ந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் தனது இரன்டு மகள்களும் சந்தோசமாக, ஒரு குடும்பத்தில் பொறுப்பான குடும்ப தலைவியாக இருக்க வேண்டும் என விரும்பிய ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், முதல் மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷை விட்டு பிரிந்துள்ளார். மேலும் தற்பொழுது இரண்டாவது மகளின் இரண்டாவது கணவன் இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சனை என கூறப்படுகிறது. இது ரஜினிகாந்துக்கு மிக பெரிய மன உளைச்சலை கொடுத்துள்ளதால் நிம்மதியின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தனது மகள்கள் சினிமாவில் துறையில் பணியாற்றுவதை விட பொறுப்பான குடும்ப பெண்ணாக முழு நேரமும் குடும்பத்தை கவனித்து கொண்டு இருப்பது தான் ரஜினிகாந்துக்கு விருப்பம் என கூறப்படுகிறது. அனல் தந்தை விருப்பத்துக்கு எதிராக இரண்டு மகள்களும் செயல்படுவது ரஜினிகாந்துக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது, மேலும் தனது இரண்டு மகள்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் மகள்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்றாலும், மகள்களை நினைத்து ரஜினிகாந்த் வேதனையுடன் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது அண்ணன் சத்தியநாராயணன் ராவ் அவர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து தெரிவித்து, அதனால் தனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி, மகள்களால் நிம்மதியில்லை என்றாலும் பேரன் பிள்ளைகளால் சற்று நிம்மதியிருந்தது, ஆனால் பேரன் குழந்தைகள் அவர்கள் அம்மா – அப்பா பிரிவினால் இடையில் பரிதவிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என வேதனையை அண்ணனிடம் ரஜினிகாந்த் வெளிப்படுத்துதியதாக கூறப்படுகிறது.

இதற்கு அண்ணன் சத்தியநாராயணன் ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்துள்ளார், ஆனால் ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியேறி கர்நாடகாவில் உங்களுடன் அங்கே வந்துவிடுகிறேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு சத்யநாராயணா ராவ் உனக்கு எப்போதல்லாம் வர வேண்டும் என விருப்பம் இருக்கிறதோ உடனே கர்நாடக வா..ஆனால் அங்கே நிரந்தரமாக இருக்க வேண்டாம், நீ உன் குடும்பத்துடன் இருப்பது தான் சரியானது என ரஜினிகாந்த்க்கு அறிவுரை வழக்கியுள்ளார் அண்ணன் சத்தியநாராயணன் ராவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?