அசிங்கப்படுத்திவிட்டு ஓடிய மகள்… தந்தையாக ராஜ்கிரண் செய்த செயல்… இப்பாவது அப்பாவோட அருமை தெரியுதா.?

0
Follow on Google News

ராஜ்கிரண் வளர்ப்பு மகளான பிரியா காதல் கண்ணை மறைக்க தந்தை சொல்லை கேட்காமல் சின்ன திரையில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். முனீஸ்ராஜா ஒரு மட்டமான புத்தி கொண்டவர் என்றும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமானவர் என தெரிவித்த ராஜ்கிரண்.

அது மட்டும் இன்றி ஜீனத் பிரியா தனது உண்மையான மகள் இல்லை என்றும் அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட அவருக்கும் எனக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “ நான் 2022 ஆம் ஆண்டு நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்துகொண்டேன். அவை மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன. எங்கள் திருமணம் சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன்.

அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றினார். இது நான் எதிர்பார்க்காதக் கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டாலும் போதாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி” என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில்தான் பிரியா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில், பேசிய அவர், “முனீஸ் ராஜாவை தான் பிரிந்ததற்கான காரணம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாக போனதுதான்.

அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்திருப்பதாக அவர் என்னிடம் சொல்கிறார். நான் அவருடைய அதிகாரப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் என்னிடம் சொல்கிறார். நான் என்னுடைய உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து முனீஸ் ராஜாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்துதான் என்னை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்பதால் அவர் அடிக்கடி குடிச்சிட்டு வந்து என்னை அடிக்கிறார்.

அந்த நேரத்தில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பணரீதியாகவும் உதவி செய்தது என்னை வளர்த்த ராஜ்கிரண் அப்பா தான். அவர் மட்டும் இல்லை என்றால் என் நிலைமை எப்படியோ ஆகியிருக்கும். நான் ராஜ்கிரண் அப்பாவை முனீஸ் ராஜாவின் பேச்சைக் கேட்டு எவ்வளவோ பேசி இருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் மறந்து எனக்கு உதவி செய்தது ராஜ்கிரண் அப்பா தான்.

ஒரு முறை என்னுடைய உறவினர் ஒருவர் எனக்கு போன் பண்ணி இருந்தார். நான் அப்போது என்னுடைய கஷ்டங்களை எல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னுடைய அப்பாவிடம் அந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. உடனே ராஜ்கிரண் அப்பா எனக்காக ஒரு வீடு எடுத்து தந்து என்னை தனியாக தங்க வைத்தார்.

அதோடு நான் கவுன்சிலிங் போக வேண்டும் என்று சொல்லி என்னை அதற்கு அனுப்பி வைத்தார். எனக்கு மருத்துவ செலவுகளை எல்லாம் ராஜ்கிரண் அப்பா தான் பார்த்தார். நான் இருந்த வீட்டில் பர்னிச்சரில் இருந்து வீட்டுக்கு தேவையான எல்லா சாமான்களையும் பார்த்து பார்த்து எனக்காக வாங்கி தந்திருக்கிறார், அப்பாவின் அருமையை புரியாமல் நான் தப்பு செய்துவிட்டேன். என்று அந்த பேட்டியில் பிரியா பேசியிருக்கிறார். இந்த வீடியோவை ராஜ்கிரண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து ராஜ்கிரனை பாராட்டி வருகிறார்கள். தன்னுடைய பிள்ளை தவறு செய்தால் அதை மன்னித்து ஏற்றுக் கொள்வது தந்தையின் பண்பு என்பதை இவர் நிரூபித்து விட்டார் என்றும் பாராட்டுகின்றனர்.