ஏழைகள் வயிற்றில் அடித்த கல் நெஞ்சம் படைத்த லதா ரஜினிகாந்த்…. கலியுக கர்ணனாக வாரி வழங்கிய விஜயகாந்த்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் கோடி கோடியாக சம்பாரித்து, சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அவர் குடும்ப பற்றிய பின்னணி மனசாட்சி இல்லாமல் செயல்பட்டு வரும் கொடூர குணம் கொண்டவர்களா என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்த விஜயகாந்த் வாழ்ந்த இந்த சினிமா துறையில் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் லதா ரஜினிகாந்தின் சில செயல்கள் ரஜினிகாந்துக்கு அவ பெயரை ஏற்படுத்தி தந்து வருகிறது.

சமீபத்தில் மோசடி வழக்கில் சிக்கிய லதா ரஜினிகாந்த், கைது நடவடிக்கைள் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த லதா ரஜினிகாந்த் யார் கண்ணிலும் பட்டுவிட கூடாது என முக்காடு போட்டு பம்மி பம்மி சென்ற வீடியோ வைரலாகி வரும் நிலையில். லதா ரஜினிகாந்த முக்காடு போட்டு போகும் அளவுக்கு சிக்கியுள்ள மோசடி வழக்கு கிட்டத்தட்ட வெறும் ஆறு கோடிக்காக தான், இந்த 6 கோடியை மிகவும் சுலபமாக லதா ரஜினிகாந்தால் கொடுத்து விட்டு சென்று விட முடியும். ஆனால் செய்ய மறுக்கிறார்.

இது போன்று லதா ரஜினிகாந்த் மீது பல வழக்குகள் உள்ளது மேலும் ஏழைகள் வயிற்றில் மசாட்சியே இல்லாமல் லதா ரஜினிகாந்த அடித்துள்ளசம்பவம் ஒன்றும் வெளியாகியுள்ளது.பண விஷயத்தில் ரெம்ப கரார் பிடித்தவரான லதா இரக்கமற்ற கல் நெஞ்சம் படைத்தவர் என கூறப்படுகிறது. ஆசிரமம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் லதா முறையாக வாடகை செலுத்தாமல் பெரும் சர்ச்சையில் சிக்கி நடிகர் ரஜினிகாந்துக்கு அவ பெயரை ஏற்படுத்தி தந்தார்,

மேலும் லதா வாடகை பாக்கி தராமல் இழுத்தடிப்பது பற்றி அந்த கட்டிடம் உரிமையாளர் ரஜினிகாந்திடம் முறையிட்ட போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என ஒதுங்கி கொண்டாராம் ரஜினிகாந்த், இதன் பின்பு தான் இந்த வாடகை பாக்கி விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை காரணம் காட்டி, ரஜினிகாந்த் மனைவி லதா, அவர் நடத்தும் ஆசிரமம் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர் என யாருக்குமே சம்பளம் தரவில்லை என கூறபடுகிறது, இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஊழியர்கள், ரஜினிகாந்த் மனைவி லதாவை பலமுறை சந்தித்து தாங்கள் படும் சிரமத்தை எடுத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுமார் ஒரு வருடத்துக்கு மேல் கொரோனாவை காரணம் காட்டி தொழிலார்களின் சம்பள பாக்கியை ரஜினிகாந்த் மனைவி லதா தரவில்லையாம், ரஜினிகாந்த் சுமார் 100 கோடி க்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும் நிலையில்,அவரது மனைவி நடத்தும் ஆசிரமம் பள்ளியின் மொத்த ஊழியர்களின் ஒரு வருட சம்பளம் சுமார் 50 லட்சம் தான் என்றும். ஆனால் இதை கூட கொடுக்க மனமில்லாமல் கல் நெஞ்சத்துடன் ரஜினிகாந்த் மனைவி நடந்து கொள்வது குறிப்பாக அவர் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் முதல் ஏழை துப்புரவு தொழிலார்கள் என அனைவரின் வயிற்றில் அடிக்கும் செயல் என கடும் விமர்சனம் எழுந்தது.

மேலும் ரஜினிகாந்தை திருமணம் செய்த பின்பு அவரை வைத்து பணம் சம்பாரிப்பதில் இருக்கும் ஆர்வம், பணத்தை வெளியே எடுப்பதில் லதாவுக்கு மணம் இருக்காது என்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.தேனாம்பேட்டையில் ரஜினிகாந்த் ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அந்த பில்டிங்கிருக்கு இவர்கள் வாடகை கொடுக்கவில்லை அது ஒரு வழக்காக மாறியது.

ரஜினிகாந்த் கல்யாண மண்டபத்திற்கு முறையாக வரி கட்டவில்லை. அது ஒரு வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியில் பணி புரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். இப்படி லதா ரஜினிகாந்த்ன் செயலால் கோடி கோடியாக சம்பாரித்து என்ன செய்ய, மரணம் அடையும் போது கூட இடுப்புல இருக்கும் அருணாகயிறை அறுத்துட்டு தான் உள்ளே புதைக்கிறார்கள் என ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்த விஜயகாந்த் பேசிய பேச்சு தான் நினைவுக்கு வருகிறது என்கின்றனர் மக்கள்…