இது தான் கடைசி படம்… உருக்கமாக பேசிய ரஜினி.. எதற்காக இந்த முடிவை எடுத்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக தனி விமானத்தில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார் ரஜினிகாந்த். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், கோடான கோடி தமிழக மக்களின் பிராத்தனை பலனாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து தமிழகம் திரும்பினார்.

ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டபின்பு தற்பொழுது வரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை அமெரிக்கா சென்று அவருடைய உடலை முழு பரிசோதனை செய்து வருகிறார் ரஜினிகாந்த். சிங்கப்பூர் சென்று சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்ட ரஜினிகாந்த் இனி ஓய்வு எடுக்க இருப்பதால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த் அவருடைய சம்பளமும் ஒவ்வொரு படத்தின் போது உயர்ந்து கொன்டே 100 கோடியை தாண்டியது. ரஜினிகாந்த்உடல்நிலை மோசமான சூழலிலும் மேலும் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய இந்த காலகட்டத்தில், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய குடும்பத்தினரின் பணத்தாசை தான் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் தன்னுடைய உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்த் உடல்நிலை சற்றும் மோசமாக இருக்கிறது, அதனால் சினிமாவில் நடிக்கும் நீங்கள் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது, உங்களுடைய உடலை மென்மையாக பாதுகாக்க வேண்டும். உங்களுடைய உடலுக்கு ஒத்துழைப்பு தருவது போன்ற ஒரு சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் மட்டுமே நீங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக தற்பொழுது உங்களுக்கு ஓய்வு முக்கியம் என மருத்துவர்கள் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது அவர் இயக்கம் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பில் காஷ்மீரில் உள்ளார். ஆனால் லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் செல்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து லியோ படத்தை முடித்த பின்பு, நம்ம இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டுள்ளார். அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் கமிட்டாகி உள்ளேன்,

லியோ முடித்துவிட்டு அந்த படத்தை தான் தொடங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் பரவாயில்லை, நான் கமல்ஹாசனிடம் பேசிக் கொள்கிறேன்.நான் உங்களுடன் இணைந்து பண்ண போகும் படம் தான் நான் சினிமாவில் நடிக்க இருக்கும் கடைசி படம் என மிக உருக்கமாக பேசிய ரஜினிகாந்த், என்னுடைய கடைசி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதால் உங்களை அழைத்து பேசுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதற்கு லோகேஷ் கனராஜ், கமல் சாரிடம் நீங்கள் பேசி கன்வின்ஸ் செய்து விட்டால், எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, உடனே லியோ படம் முடித்துவிட்டு அடுத்து நம்ம படத்தை தொடங்கலாம் என்று லோகேஷ் கனராஜ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.மேலும் ரஜினிகாந்த்க்காக நிச்சயம் லோகேஸ்க கனகராஜை விட்டு கொடுப்பர் கமலஹாசன் என கூறப்படுகிறது.