இதெல்லாம் விஜய்யிடம் வெச்சுக்கோ …நெல்சனை எச்சரித்த ரஜினி…பெட்டி பாம்பாக அடங்கிய நெல்சன்…

0
Follow on Google News

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. மேலும் இப்படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார். ட்ரெய்லரை பொறுத்தவரை ‘பாட்ஷா’ பாணியில் தொடக்கத்தில் மாணிக்கமாக வீட்டில் பணிவிடை செய்துகொண்டு சாதுவாக இருக்கிறார் ரஜினி. ஒரு கட்டத்தில் சம்பவத்தில் இறங்கும் அவர் மாணிக்கத்திலிருந்து ‘பாட்ஷா’வாக மாறுகிறார். அது போல போலீசாக இருக்கும் வசந்த் ரவியின் தந்தையாக குடும்பத்தையும் காக்கும் பொறுப்பை சுமக்கிறார் என தோன்றுகிறது.

காவலா பாடல் மூலம் ஜெயிலர் படத்தை தமன்னாகாகவே பார்க்க வேண்டும் மிக அவளோடு இருந்த தமன்னா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடையும் விதத்தில் இருந்தது, ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரின் ஒரு காட்சியிலும் கூட தமன்னா இடம்பெறாதது, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற . ‘ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது. வீச்சு தான்’ என்ற வசனத்துக்குப்பிறகு “மும்பையில நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்பதற்கு ஏற்ப சில ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் வந்து செல்கின்றன.

நெல்சனின் வழக்கமான பயந்த தீபா கேரக்டரை இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரீப்ளேஸ் செய்திருக்கிறார். அனிருத் தன் பங்கிற்கு மாஸ் பிஜிஎம்மை அள்ளி தெளித்திருக்கிறார். இந்த டிரெய்லரைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை பாராட்டி தள்ளி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் ரஜினி, நெல்சன்க்கு ஒரு ஆர்டர் போட்டுள்ளாராம்.

அதனால் தான் நெல்சன் எந்த ஒரு ப்ரோமோஷன் நேர்காணல்களிலும் காணவில்லையாம். பீஸ்ட் படத்தின் போது அந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் நெல்சன் என அனைவரும் அதிகப் புரமோஷன் நேர்காணலில் கலந்து கொண்டனர். ஆனால் படமோ படும் மொக்கையாய் வெளியானது. மேலும் பல ட்ரோல் வந்தது. இதுபோன்று ஜெய்லர் படத்திற்கு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே எந்த ஒரு நேர்காணலிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் ஏற்கனவே பண்ண புரமோஷன் போதும் புதியதாக எந்த ஒரு புரமோஷனும் வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் நெல்சனுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.

இந்நிலையில் பீஸ்ட் படம் படு மொக்கையாக அமைந்த பின்பு, நெல்சனின் சினிமா கேரியர் இத்துடன் காலி என்கிற ஒரு சூழல் உருவாகியிருந்த நிலையில், பீஸ்ட் படம் வெளியாவதர்க்கு முன்பே ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நெல்சன் கமிட்டாகி இருந்தார், இதனால் பீஸ்ட் பட தோல்வியால் ரஜினி படத்தில் இருந்து நெல்சன் மாற்றப்படுவார் என கூறப்பட்ட நிலையில், நெல்சன் மீது நம்பிக்கையில் ரஜினி ஜெயிலர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

அந்தவகையில் நெல்சன் பீஸ்ட் படத்தில் ஆட்டம் போட்டு அட்ராசிட்டி செய்தது போன்று, ஜெயிலர் படத்தில் ஆட்டம் போட கூடாது என ரஜினி கண்டிஷன் போட்டுள்ளதை தொடர்ந்து தான் நெல்சன் இந்த முறை எந்த ஒரு ஆட்டமும் போடாமல் அமைதியாக உள்ளாராம். இந்தப் படம் பிளாப் ஆனால் நெல்சன் சினிமா கேரியரே காலி ஆகிவிடும் என பலரும் கூறி வரும் வகையில், நெல்சன் அமைதியாக இருந்து அனைத்தையும் சாதிப்பார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். படம் எவ்வாறு இருக்கப் போகிறது என்று அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.