இதெல்லாம் கமல்ஹாசனிடம் வெச்சுக்கோ என்கிட்ட வேண்டாம்…. பிக் பாஸ் வீட்டில் மூக்குடைபட்ட மாயா…

0
Follow on Google News

அதிகமான ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த உறவினர்களின் வருகை நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்க தொடங்கி இருக்கிறது. நீங்கள் ஆர்வத்தோடு காத்திருந்த டாஸ்க் தொடங்கப் போகிறது என்று சொன்னதுமே எல்லோரும் டக் என்று புரிந்து கொண்டார்கள். ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்க போகிறது, நம்ம குடும்பம் வரப்போறாங்க என்று எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

அப்போது மேலும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அதாவது இந்த சீசனில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒருவர் இன்று வரலாம், மற்றொருவர் நாளை வரலாம் இல்லை மொத்தமாகவும் ஒரே நாளிலும் வருவார்கள் என்று சொல்ல அதை கேட்டு போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டனர். அதைத் தொடர்ந்து பூர்ணிமாவின் பெற்றோர் வந்திருந்தனர்.

பூர்ணிமா, பெற்றோரைத் தொடர்ந்து, அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தனர். பின்னர் விக்ரமின் தாய் மற்றும் தந்தை வந்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் குடும்பத்தினர், அவர்கள் மண்மனம் மாறாத அதே பேச்சை தொடர்ந்தனர். அதிலும், விக்ரமின் தந்தையின் பேச்சு, பயங்கர மாஸாக இருந்தது. விக்ரம் மீது விழந்த விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தார் அவரது தந்தை.

பேச்சின் நடுவே, அவ்வப்போது தன் மகன் மீதான மற்றவர்களின் விமர்சனங்களை அவர் இடைச்சொறுகலாக உள்ளே வார்த்தைகளில் விட்டுக் கொண்டிருந்தார். அப்படி தான், விக்ரமும் அவரது தந்தையும் விசித்ராவிடம் பேசிக் கொண்டிருந்த போது, உள்ளே வந்த மாயா, அவர்களுடன் பேசினார். அப்போது ஏதோ ஒரு வார்த்தையில், கட்டம் கட்டுவதைப் பற்றி மாயா பேசினார். அதை பிடித்துக் கொண்ட விக்ரமின் தந்தை, ‘தெரியும்.. நீங்க இவனை கட்டம் கட்டுவது தெரியும்..’ என்று ஒன்றுக்கு பலமுறை கூற, மாயா முகம் மாறியது.

‘என் மகனிடம் கட்டம் கட்டுவதைப் போல, என்னிடம் முடியாது’ என்று விக்ரம் தந்தை பேசியதும், மாயா அங்கிருந்து எதுவுமே பேசாமல், பின்நோக்கி நடந்தார். அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது புரியாமல், வழக்கம் போல விக்ரம் தன்னுடைய தந்தையின் பேச்சை மாற்ற முயற்சித்தார். அதே போல, கேமரா முன் சென்ற விக்ரமின் தந்தை, ‘பிக்பாஸ் என்னை மட்டும் ஒரு வாரத்திற்கு இங்கே தங்க வைங்க.. எப்படி இருக்கேன்னு மட்டும் பாருங்க.. என் மகன் மாதிரி மட்டும் இருக்க மாட்டேன்’ என்று கூற, ‘அப்பா.. என்னப்பா..’ என்று அவரைப் பார்த்தார் சரவண விக்ரம்.

பின் விக்ரமுடைய அம்மாவும் அப்பாவும் மாயாவிடம் ஏற்கனவே நாங்க எங்க பையனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கோம். ஆனால் அந்தப் பெயர் மறந்து போகிற மாதிரி நீங்க புதுசா ஒரு பேரை வச்சுக்கிட்டு இருக்கீங்க, அந்த பெயர் வெளியே எப்படி எல்லாம் போகுதுன்னு உங்களுக்கு தெரியுதா என்று கேட்கிறார். அதற்கு மாயா ஐயோ அங்கிள் நான் எதுவும் தப்பா பேரு வைக்கல, நான் சும்மா ஜாலிக்காகத்தான் காக்ரோச் என்று கூப்பிட்டேன் என்று சொல்ல அதற்கு சற்று எதிர்பார்க்காத வகையாக நீ இதை வார இறுதி நாளில் கமல் சார் முன்பு வேனா சொல்லு அவரு நம்புவாரு, நாங்க 24 மணி நேர எபிசோடை பார்த்துட்டு இருக்கோம் அதனால நீ சொல்றத நம்ப மாட்டோம் என்று சொல்ல, மாயாவின் முகத்தில் ஈ ஆடவில்லை.

ஏற்கனவே கமல்ஹாசன் நிகழ்ச்சியை பார்க்காமல் ஸ்கிரிப்ட் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு போகிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளிப்படையாகவே விக்ரமுடைய அப்பா இதை கூறியிருக்கிறார். அதற்கு பிறகு போகும் போது விக்ரம் அப்பா தன்னுடைய மகனிடம் உன்னைப் பற்றி யாராவது தவறாக பேசினால் உடனே நீ கேள்வி கேளு, நீ எல்லா இடத்திலும் ஏத்துக்கிட்டு போனா உன்னை அவங்க வேற மாதிரி லேபிள் குத்திடுவாங்க என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் மாயாவிடம், நீ இதை வார இறுதி நாளில் கமல் சார் முன்பு வேனா சொல்லு அவரு நம்புவாரு, நாங்க 24 மணி நேர எபிசோடை பார்த்துட்டு இருக்கோம் அதனால நீ சொல்றத நம்ப மாட்டோம் என விக்ரம் தந்தை பேசியது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஒரே வார்த்தையில் கமல்ஹாசனை அசிங்கப்படுத்தியது போன்றும், மாயாவுக்கு முக்குடை பட்டது போன்று உளது என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.