அனிருத்துடன் சேர்ந்து குடி கூத்தும் கும்மாளமாக இருந்த தனுஷ் மனைவி ஐஸ்வர்யா..! இதற்கு காரணம் தனுஷ் தானம்… சினிமா பிரபலம் வெளியிட்ட ரகசிய தகவல்.

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக இரண்டு தரப்பில் இருந்தும் பிரிவதாக தெரிவித்திருந்த நிலையில் விரைவில் இருவரும் விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இரண்டு தரப்பில் இருந்து ஈடுபட்டு வருவதாக கூறபடுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி இருவருமே மது அருந்தும் பழக்கம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்த ஆரம்பக்கட்டத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த தனுஷ் ஆடுகளம் படத்துக்கு பின்பு சக நடிகைகளிடம் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது என நடிகை முதல் தொகுப்பாளினி வரை புகுந்து விளையாடினர். இதனால் தொடர்ந்து தனுஷ் மீது கிசு கிசுக்கள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக தனுஷ் மற்றும் அவரது மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரட்சனை நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா எல்லை மீறி மது அருந்த ஆரம்பித்துள்ளார். மேலும் தனது உறவுக்கார பையன் இசை அமைப்பாளர் அனிருத் மீது நெருக்கம் காட்டியுள்ளார். இந்த விவகாரம் தனுஷ் கவனத்துக்கு வந்தாக கூறப்படும் நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மன கசப்புக்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யாவின் உறவினரும், இசையமைப்பாளருமான அனிருத் தான் என்று கூறியுள்ளார். அனிருத், ரஜினியின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவு முறை சுருக்கமாகச் சொன்னால் ஐஸ்வர்யா, அனிருத்திற்கு முறை பொண்ணு. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகினார்கள்.

அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல போட்டோக்கள் ஊடகங்களில் வெளியானது. ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தனுஷ் இதில் இருக்கும் சீரியஸை பார்த்து அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் இருவரும் தனுஷின் வார்த்தைகளை மதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ் அனிருத்துடன் இருந்த நெருக்கமான நட்பை முறித்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் தற்போது வரை பேசிக் கொள்வதில்லை என்று பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷுக்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் அனிருத் தான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா இது போன்று செயல்பட காரணம் தனுஷ் பிற பெண்களுடன் குடியும், கூத்தும் கும்மாளமாக இருந்தது தான் என கூறபடுகிறது.