பயில்வான் மட்டும் சாகட்டும் … நடிகை சொன்ன பகீர் தகவல்…

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து யூ டுயூப்பில் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விசயங்களை பேசி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர். ஆனால் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சண்டையிட்டு அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தினால் கூட அதை கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் அவரது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

நடிகை ராதிகா தயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயில்வான் ரங்கநாதன் திருவான்மியூர் பீச்சில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது. அங்கே எதிரில் வந்த நடிகை ராதிகா மிக கடுமையாக திட்டினார், ஆபாசமாக கூட பேசினார். இதற்கு நான் அப்படி தான் பேசுவேன், நான் பேசியது தவறு என்றால் என் மீது வழக்கு பதிவு செய். நான் சட்டப்படி சந்தித்து கொள்கிறேன் என பயில்வான் தெரிவிக்க அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் ராதிகா.

இந்நிலையில் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் இரவின் நிழல். இந்த படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து தவறாக பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவருடைய தனிப்பட்ட வாழ்கை குறித்தும் அவருடைய ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் பயில்வான் பேசியிருந்த நிலையில்,வழக்கம் போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த பயில்வானிடம் நேரில் சந்தித்தும் பொதுமக்கள் மத்தியில் சண்டையிட்டார் ரேகா நாயர்.

உன் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவியா.? என கேட்ட ரேகா நாயர். மேலும் என்னைப் பற்றி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கின்றது. உன் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி பேசி இருக்கின்றாயா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன் மகள் என்ன செய்கிறது என்று உனக்குத் தெரியுமா.? காண்டம் அது இது என்று என்னை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றாய். சினிமாவில் நடிக்கும் நடிகரைப் பற்றி பேசி அதில் வரும் பணத்தில் நீ உயிர் வாழக்கூடாது.

நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் நான் உன் பிள்ளையா.? உன் பொண்டாட்டியா.? வயதுக்கு கூட மரியாதை தரமாட்டேன். என்னைப் பற்றி பேசுவது உனக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் அம்மணமாக நடிப்பேன், சினிமாவில் என்ன வேண்டுமென்றாலும் நான் செய்வேன். உனக்கு என்ன வந்தது, நீ என்ன விளக்கு பிடித்தாயா? இல்லை கூட்டிட்டு போனியா.? செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல். நான் அவுத்துப் போட்டு நிற்பேன் உனக்கு இஷ்டம் இருந்தால் பார்.

நீ தான் பக்கத்தில் உட்கார்ந்து விளக்குப்படுத்தியா.? காண்டம் பயன்படுத்துகிறேன், விபச்சாரி என்று இப்படியெல்லாமா பேசுகிராய், நீ என்னை கூட்டிட்டு போனியா, விபச்சாரி என்று சொல்வதற்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது. அம்மணமாக நடித்தால் என்ன வேண்டுமென்றாலும் நீ பேசுவியா.? கழட்டி போட்டு நிற்கிறேன் நீ பார்க்கிறாயா.? என ரேகா நாயர் கேட்க, அதற்கு சீ..சீ.. என்று கண்ணை முட்டிக்கொண்டு ஓடிவிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரேகா நாயர். “நரகாசூரன் இறந்ததை பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அதுபோல் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். ஞாயத்தை சொல்லி சம்பாதிக்கலாம் ஆனால் இல்லாததை சொல்லி சம்பாதிக்கவே கூடாது. நான் வாழும் காலத்தில் இருக்கும் மிக மோசமான மனிதர் அவர்.

நடிகர்களின் நன்றி: நான் திருவான்மியூரில் அவ்வாறு பயில்வானிடம் நடந்துகொண்டதை அடுத்து பெரிய நடிகர்கள் பலர் எனக்கு ஃபோன் செய்து யம்மா உனக்கு கோடி புண்ணியம் என்றார்கள். ஆண் என்ற போர்வையில் திரியும் பிணம். பிணத்துக்குக்கூட மரியாதை கொடுக்கலாம். ஆனால் இதுக்கெல்லாம் கொடுக்க முடியாது. அது ஒரு ஜந்து. இதற்கு மேல் பேசினார் வாய்ல என்னவெல்லாமோ வருது என ரேகா நாயர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.