பரவாயில்லை காத்திருக்கிறேன்.. மகிழ் திருமேனிக்கு அஜித் போட்ட கண்டிஷன்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் துணிவு. இந்த படத்தில் அஜித் கமிட்டான போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். அந்த வகையில் தன்னுடைய புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவனுக்கு கொடுத்தார். ஆனால் விக்னேஷ் சிவனிடம் புதிய படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை மட்டும் கேட்டு கமிட்டானார்.

இதனை தொடர்ந்து துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ்சிவனிடம் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு முழு கதையும் கேட்ட அஜித் கடும் அப்செட் ஆனவர், அவருக்கு அந்த கதையில் நடிக்க விருப்பமில்லை. இதனால் விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி மாற்றப்பட்டார். மகிழ் திருமேனியிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு ஓகே சொன்ன அஜித்.

தற்பொழுது முழு திரைக்கதையும் தயார் செய்து வர சொல்லியுள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மகிழ் திருமணி முழு கதையும் தயார் செய்வதற்கு தாமதமாவதால் படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து தள்ளி செல்கிறது. மகிழ் திருமேனி அவருடைய உதவி இயக்குனர்கள் உடன் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள.

அஜித் ஏற்கனவே விக்னேஷ் சிவனிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு ஏமாந்தது போதும், அந்த வகையில் மகிழ் திருமேனி முழு கதையும் கொண்டு வந்த பின்பே படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று உறுதியாக இருக்கிறார். இதனால் தாமதம் ஆகிறது என அஜித்திடம் கேட்டதற்கு பரவாயில்லை நான் காத்திருக்கிறேன் என்று அஜித் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் , மகிழ் திருமேனி படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு இது வரை வெளியாகாமல் இருக்க இது தான் காரணமாம்..

சாரி சார்… ப்ளீஸ் சார்..பார்த்திபனிடம் கெஞ்சிய நயன்தாரா… முடியாது என தூக்கி எறிந்த பார்த்திபன்..