அஜித் போட்ட அதிரடி கண்டிஷன்… விடமுயற்சியில் இருந்து வெளியேற்றபட்ட திரிஷா..

0
Follow on Google News

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு “விடாமுயற்சி”னு டைட்டில் வைத்திருப்பதாக தகவலை வெளியிட்டதுதான் சரி, அதனையடுத்து படக்குழுவினரிடம் இருந்து எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. ஒரு பக்கம் நடிகர் அஜித் உல்லாசமாக பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள், மற்றொரு பக்கம் ஹீரோயின் தமன்னாவா? திரிஷாவா?ன்னு பரவி வரும் செய்திகள் என பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருவதால்,

படத்துக்கு பூஜை போட்டாங்களா இல்லையா, ஷூட்டிங் நடக்குதா இல்லையா? இப்படியெல்லாம் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் அஜித் ரசிகர்களும் வழக்கம்போல சோஷியல் மீடியா அனைத்திலும் அப்டேட்.. அப்டேட்னு கேட்டுகிட்டே இருக்காங்க. இப்படியே போனா எப்படிப்பா!! இதுக்கு ஒரு என்டே இல்லையா? என்ற மாதிரி ரசிகர்களின் மன நிலையும் இருக்கிறது என்று கூறலாம்.

உண்மையில், விடாமுயற்சி படப்பிடிப்பு இப்படி தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதற்கு காரணம் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் கிடையாது. ஆம், தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காதான். அட ஆமாங்க… சமீபத்தில் லைக்கா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளது.

இதனையடுத்து இப்படத்தை எடுக்க போதுமான நிதி இல்லை என லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனாலேயே படப்பிடிப்பு தடைபட்டு வருகிறது. இந்த கேப்பில் தான் நடிகர் அஜித்தும் பைக் டூர் போய்க்கொண்டு உற்சாகமாக இருக்கிறார். இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள், வரும் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அண்மையில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஒரு ட்வீட் பல நாள் எதிர்பார்ப்பில் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் ஆக இருந்தது. இருப்பினும், அஜித் ரசிகர்கள் இந்த முறையாவது ஷூட்டிங் நடக்குமா என்ற சந்தேகத்துடன்தான் இருக்கின்றனர். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடிகர் அஜித் படக்குழுவுக்கு ஒரு கண்டிஷனை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தை ஆரம்பிப்பதாக கூறி 5 மாதங்கள் வரை ஆகியுள்ள நிலையில், தற்போது அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை இப்படத்தில் நடிக்க அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை முடித்துக் கொடுத்ததும், மீண்டும் 11 மாதங்கள் வேர்ல்ட் டூர் போக அஜித் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே, இனியும் படப்பிடிப்பைத் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தால் சரி வராது, அடுத்த 4 மாதங்களில் இப்படத்தை முடிக்க வேண்டுமென அஜித் கண்டிஷனுடன் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தைத் தயாரிக்க லைக்கா நிறுவனம் ஆயத்தமாகி வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

இப்போது லைக்கா நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பதை நோக்கி பலரும் ஆவலுடன் காத்திருகின்றனர். எவ்வாறாயினும், நடிகர் அஜித் கூறியது போல, படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரியில் முடித்து விட்டால், கட்டாயம் மே மாதம் அஜித்தின் பிறந்தநாளின் போது இப்படம் ரிலீசாகி விடும். இது அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிரடியாக்கும். எனவே, இந்த முறையாவது தாமதம் செய்யாமல் முழுவீச்சில் படப்பிடிப்பை தொடங்குமாறு அஜித் ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.