ரசிகரை பளார் பளார் என்று கண்ணத்தில் அறைந்த அஜித்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித், தனது ரசிகர்கள் தனக்காக வீண் செலவு செய்து பேனர் வைப்பது போன்ற விஷயங்களை விரும்ப மாட்டார்.தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தன் மனம் போன போக்கில் தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அப்படிப்பட்ட நடிகர் அஜித், ஒருமுறை தனது தீவிர ரசிகரை கன்னத்தில் பளார் என்று அறைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகை ஆர்த்தி youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித் இதுவரை 61 படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது பைக்கில் உலகச் சுற்றுலா, எப்போதாவது படத்தின் சூட்டிங் என்று இருந்து வரும் அஜித்தை இன்று வரை ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி தீர்க்கின்றனர்.

ஆனால், சமீப காலமாகவே, நடிகர் அஜித்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.தன்னை வீடியோ எடுக்கும் ரசிகர்களின் போனை வாங்கி வீடியோவை டெலிட் செய்வது, கூட்டத்திற்குள் செல்ஃபி எடுக்க முயற்சி செய்யும் ரசிகரின் மொபைலை பிடுங்கி வைப்பது என தனது ரசிகர்களிடம் அஜித் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பல்வேறு சம்பவங்கள் உள்ளன.

அஜித்தின் இந்த நடவடிக்கைகள் சோசியல் மீடியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இருப்பினும் அஜித் ரசிகர்கள் அஜித் மீது கொண்ட பேரன்பால் அவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில், நடிகர் அஜித் தனது ரசிகரை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நடிகை ஆர்த்தி பகிர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை இணையவாசிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

எதற்காக அஜித் அப்படி செய்தார் என்பதை இங்கே பார்க்கலாம். டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு ஆர்த்தி அளித்த பேட்டியில், “அஜித் சாரின் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அஜித்தை பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் தனது தலைமுடியில் “தல” என்று ஹேர் கட் செய்து இருந்தார். அஜித் படத்தின் ஷூட்டிங் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.. அவ்வளவு கூட்டத்திலும் அஜித் அந்த ரசிகரை கவனித்து விட்டார். உடனடியாக காவல்துறையினரிடம் கூறி அந்த ரசிகரை அழைத்து வரச் செய்தார்.

அந்த ரசிகரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் உற்சாகத்தில் அஜித்தை தேடி வந்தார். ஆனால் அவர் அருகே வந்ததும் அஜித் அவரது கன்னத்தில் ஓங்கி பலர் என்று ஒரு அறை விட்டார். இது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகரும் மிகுந்த ஏமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அந்த ரசிகர்களோடு தனது உதவியாளரை அனுப்பி மொட்டை அடிக்க செய்தார். மொட்டை அடித்து விட்டு அஜித்தை பார்க்க ரசிகர் வந்தார்.

அப்போது எதுவும் சொல்லாமல் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ரசிகரியிடம் பேசிய அஜித், நீ அவ்வாறு ஹேர் கட் செய்வதற்கு உன் பெற்றோர்கள் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார்கள். உங்களுடைய அன்பு எப்போதும் மனதில் இருந்தால் போதும் என்று அட்வைஸ் பண்ணி அந்த ரசிகரை அனுப்பி வைத்தார்” இன்று ஆர்த்தி அஜித் குறித்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.