ஏற்கனவே அஜித்திடம் வாங்கியது பத்தாது… ரஜினியிடம் வாலை சுருட்டிய விஜய்..

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தான் வசூலில் நம்பர் ஒன் என்று வியாபார ரீதியான ஒரு தோற்றம் இருந்து வந்தது. இதற்கு பெரும்பாலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சோலோவாகவே வெளியாகி வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பத்தை உடை தெரிய வேண்டும், யார் நம்பர் ஒன் என்பதை நேரடியாக மோதி பார்த்து விடுவோம் என முடிவு செய்த நடிகர் அஜித்.

சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தை வெளியிட்டு, வாரிசு படத்தின் வசூலை விட அதிக வசூல் படைத்து ஏற்கனவே விஜய் தான் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பத்ததை சுக்கு நூறாக உடைத்துள்ளார், துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாரிசு படத்தின் தேதியை தள்ளி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.

ஆனால் நடிகர் விஜய் தான் பிடிவாதமாக மோதி பார்த்து விடுவோம் என்று இருந்துள்ளார். இதனால் நடந்த நேரடி போட்டியில், அஜித்திடம் பலத்த அடி வாங்கியதுதான் மிச்சம். இந்த நிலையில் நடிகர் ரஜினி தற்பொழுது நடித்து வரும் ஜெயிலர் படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது, மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தை தீபாவளி அன்று ஜெயிலர் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியிடுவது விஜய் திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் அதற்கு தயாரிப்பு தரப்பினர் ஏற்கனவே துணிவுடன் மோதி பலத்த அடி வாங்கியது போதாதா.? மீண்டும் ரஜினியுடன் மோதி சேதாரத்தை ஏற்படுத்த தாங்கள் விரும்பவில்லை என தயாரிப்பு தரப்பினர் தெரிவிக்க, ரஜினியுடன் நேரடியாக மோதுவதை விட்டுவிட்டு வாலை சுருட்டி கொண்டார் விஜய் என கூறப்படுகிறது.