மதுபோதையில் மனைவி பற்றி செல்வராவகவன் கேட்ட கேள்வி..! டென்ஷன் ஆன விஜய்.. என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நட்சத்திர ஓட்டலில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் விஜய் இடையே நடந்த பரபரப்பு சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன், துள்ளுவதோ இளமை படத்தில் தந்தை கஸ்தூரி ராஜாவால் இயக்குனராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். முதல் படமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை அளித்து முன்னனி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார் செல்வராகவன்.

காதல் கொண்டேன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான சோனியா அகர்வால் தமிழில் தான் நடித்த முதல் படத்திலே, அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் காதல் வலையில் விழுந்தார், காதல் கொண்டேன் படம் மிக பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, அவர் அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக நடித்த கோவில் படமும் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இதனை தொடர்ந்து சோனியா அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. மதுர படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இயக்குனர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் கொடுத்த பின்பு, அவருடைய மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது, இந்நிலையில், மிக பெரிய தயாரிப்பு நிறுவனம் ஓன்று அப்போது முன்னணி இயக்குனராக இருந்த செல்வராகவன், மற்றும் முன்னணி நடிகர் விஜய் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியது.

செல்வராகவன் மற்றும் விஜய் இருவரிடமும் பேசி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரையும் வரவழைத்து, விஜயிடம் செல்வராகவன் கதை சொல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது, இயக்குனர் செல்வராகவன் தொடர் வெற்றியை கொடுத்து வருவதால், அவருடைய படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்த உடன் சற்றும் யோசிக்காமல் ஒப்பு கொண்டுள்ளார் விஜய். இந்நிலையில் நட்சத்திர ஓட்டலில் விஜய்யிடம் கதையை சொல்ல ஆரம்பித்துள்ளார் செல்வராகவன்.

இந்த கதை டிஸ்கஷனில், விஜய் மற்றும் செல்வராகவன் மட்டும் இருந்துள்ளனர், தயாரிப்பாளர் வெளியே வந்துள்ளார், செல்வராகவன் படத்தின் கதையை சொல்லியுள்ளார், கதை விஜய்க்கு பிடித்து போனது, இதன் பின்பு சில நிமிடங்களில் இவர்கள் விரும்பு மது கொடுக்கப்பட்டுள்ளது, மது அருந்துவதற்கு முன்பு வரை அமைதியாக மிக குறைவாக பேசிய செல்வராகவன் மது அருந்திய பின்பு, மெல்ல விஜய்யிடம் சுதந்திரமாக பேச தொடங்கினார்.

அப்போது தான் காதலிக்கும் நடிகை சோனியா அகர்வாலை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து செல்வராகவன் பேச தொடங்கியவர், இதற்கு முன்பு நீங்க நடித்த மதுர படம் அனுபவம் எப்படி இருந்தது என செல்வராகவன் கேட்க, அதற்கு சில சம்பவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார் விஜய், அந்த படத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்திருக்கும் அப்போது உங்களுடன் சோனியா அகர்வால் உடன் வந்திருப்பார், உங்களுக்குள் ஏதும் நடக்கவில்லையா என செல்வராகவன் கேட்க.

ஷாக்கான விஜய் என்ன சொன்னிங்க சரியா கேட்கவில்லை என மீண்டும் கேட்க, அதற்கு செல்வராகவன் தனது வருங்கால மனைவியுடன் நீங்கள் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற போது உங்களுக்குள் ஏதும் நெருக்கமாக அஜால் குஜால் நடக்கவில்லையா.?என செல்வராகவன் கேட்க, டென்ஷன் ஆனா விஜய் அங்கே தனது மேஜையில் இருந்த கிளாஸை தட்டிவிட்டு அங்கே இருந்து கோபத்தில் வெளியேறியதாக கூறபடுகிறது, இதன் பின்பு செல்வராகவன் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராக வேண்டிய படம் தடை பெற்றதாக கூறப்படுகிறது.