இருட்டில் குலுங்கிய கார்.. போலீசாரை பார்த்ததும் இளம் பெண் ஓட்டம்….நிர்வாணமாக சிக்கிய மருத்துவர்..! சென்னையில் நடத்த பரபரப்பு சம்பவம்..

0
Follow on Google News

தமிழகத்தில் உள்ள பூங்காக்கள், திரையரங்குகள், கடற்கரை போன்ற சுற்றுலா தளம் போன்ற இடங்களில் காதல் ஜோடிகளின் சில்மிஷங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது கொரோன தொற்று காரணமாக திரையரங்கு, பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூட பட்டுள்ள நிலையில் காதல் ஜோடிகள் சந்திக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர், மலை அடிவாரங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தற்போது காதல் ஜோடிகள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை அருகில் இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மின்சார விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதிகளில் காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது, அனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகளை மீறி காதல் ஜோடிகள் வெளியில் வந்து சந்தித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரோட்டின் ஓரத்தில் இருந்த சொகுசு கார் ஓன்று குலுக்கி கொண்டிருந்தது.

வெளிச்சம் இல்லாத பகுதியில் கார் குலுங்கி கொண்டிருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், கார் அருகில் சென்ற போது அந்த காரில் இருந்து வெளியில் வந்த இளம் பெண் ஒருவர் காரின் அருகில் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொன்டு மின்னல் வேகத்தில் அந்த பகுதியில் இருந்து பறந்தார், இதனை தொடர்ந்து காரில் உள்ளே இருந்து அறை நிர்வாணத்துடன் போலீசாரிடம் சிக்கினார் ஆடவர் ஒருவர்.

இதனை தொடர்ந்து அந்த ஆடவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் பல் மருத்துவர் என்பது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காரில் பயணித்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தான் ஒரு பெண் எம்பியின் உறவினர் என்றும், எம்பியின் பெயரில் இ-பாஸ் தன்னிடம் உள்ளதை காண்பித்து, தற்போது காரில் இருந்து வெளியில் சென்ற பெண் தனது பெண் தோழி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காரின் என்னை குறித்துவிட்டு அவரை அனுப்பி வைத்த போலீசார், சம்பந்த பட்ட அந்த பெண் எம்பியை தொடர்பு கொண்டு கேட்ட போது அந்த வாகனம் மற்றும் அவர் யார் என்றே தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து அந்த வாகனத்தின் எண்களை வைத்து முகவரியை கண்டுபிடித்ததில் அந்த நபர் மடிப்பாக்கம் பல் மருத்துவர் ஷாம் கண்ணன் என்பது தெரியவந்து அவரின் முகவரிக்கு சென்று அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் ராஜ கோபால் என்கிற மருத்துவரிடம் இருந்து எம்பி பெயரில் இ-பாஸ் பெற்று அதில் தனது கார் நம்பரை பயன்படுத்தி போலியாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது, இந்த போலி இ-பாஸை பயன்படுத்தி சுங்கை கட்டணம் செலுத்தாமல் வெளியில் சுற்றி வந்தததும் தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து போலியான இ-பாஸ் பயன்படுத்தி மோசடி செய்ததாக மருத்துவர் ஷாம் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.