சவுக்கு சங்கருக்கு விழுந்த சவுக்கடி சம்பவம்… தரமான சம்பவம் செய்த சவுக்கு மீது புகார் கொடுத்த சாதனை பெண்..

0
Follow on Google News

சவுக்கு சங்கர் பெண் காவலர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெண் காவலர்கள் புகார் கொடுத்தும் வரும் நிலையில், இதில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உறுப்பினராகவும், சமூக செயற்பாட்டாளராகவும், கல்வியாளராகவும், மனநல ஆலோசகராகவும் இருக்க கூடிய கல்யாணந்தியும் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சாதனை பெண்ணாக வலம் வரும் கல்யாணந்தி சவுக்கு சங்கர் மீது எதற்காக வழக்கு கொடுத்தார் என கொடுத்துள்ள விளக்கத்தை பார்கின்றவர்கள், சிலருக்கு கண் கலங்க கூட செய்யும், அதே நேரத்தில் இந்த விளக்கம் சவுக்கு சங்கருக்கு சரியான சவுக்கடி என்று கூட பலரும் வரவேற்று வருகிறார்கள். கல்யாணந்தி தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு J1 சைதாப்பேட்டை காவல் நிலையம் அனைத்து மகளிர் W20 அப்போதைய இன்ஸ்பெக்டர் யுவராணி அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து குடும்பவன்முறையில் சிக்கித்தவிக்கும் இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.

பார்ப்பதற்கு நல்ல உயரம், டிப்ளமோ படித்திருக்கிறாள். ஒரே ஒரு கைக்குழந்தை. வேறு ஜாதியில் திருமணம். பெற்றோர்களின் அரவணைப்பு இல்லை. கணவனுக்கு இல்லாத பழக்கம் இல்லை. கஞ்சா, குடி என எங்கு விழுந்து கிடக்கிறான் என்றே தெரியாது. அவளை இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு தயார் செய்ய வைக்க முடியுமா என கேட்டார். அந்தப் பெண்ணுக்கு இலவசமாக பயிற்சி அளித்தேன். ஒரு வருடம் தினமும் பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகவும் நன்றாக படித்தார். அந்த பேட்ச்சில் பயின்ற அனைத்து மாணவர்களையும் விட கெட்டிக்காரி.

அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்று காவலர் ஆனார். அன்று அவளின் எதிர்காலமும் அவளின் பெண் குழந்தையின் எதிகாலமும் உறுதி செய்யப்பட்டது. 1000 கணக்கான பெண் காவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். கடும் சுமைகளுக்கு நடுவில் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் தன்னை பார்த்து வளரும் தன் கிராமத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் அக்கா காவல் துறையில் சேர்ந்து வேலை பார்க்கின்றாள். நாமும் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று இவர்களை பின்தொடர்ந்து வருவார்கள்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வந்து படித்து தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் சேர்ந்து அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கால்கடுக்க மக்களுக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டான காலகட்டத்தில் ஃபால்- இன் என்றால் போதும், பணிக்கு வந்து விடுவார்கள். இவர்களுக்கு நல்ல நாள், பண்டிகை எல்லாம் நம்மை போல இல்லை.

அனைவரும் நன்கு படித்தவர்களும் கூட. அவர்கள் ஏன் உயர் அதிகாரிகளை அட்ஜஸ்ட் செய்து ப்ரோமோஷன் வாங்க வேண்டும். இரண்டாம் நிலை காவலர்கள் SI எக்ஸாம் எழுதலாம், அல்லது டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி அடுத்த நிலைக்கு செல்லலாம். சவுக்கு சங்கர் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் பிற்போக்கு எண்ணம் கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் பெண்களை படிக்க அனுப்பவே யோசிக்கக்கூடும். 24 மணி

நேரம் டியூட்டி, நைட் டியூட்டி என வேலை பார்க்கும் பெண் காவலர்கள் அனைவரின் வீட்டிலும் நிம்மதி இருக்கா என கேட்டுப்பாருங்கள். தன் பிள்ளைகள் வீட்டுக்கு வரும் நேரத்தில் பக்கத்தில் இருந்து உணவு பரிமாறி அவர்களை அரவணைக்கும் நேரத்தில் வெளியில் பந்தோபஸ்து பார்த்துக்கொண்டே தன் பிள்ளைகளை நினைத்து உருகும் தாய்மார்கள் பலர் காவல்துறையில் உள்ளனர். சவுக்கு சங்கர் தன்

பத்திரிகை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. ஆளும் கட்சியின் மீது இருக்கும் வன்மத்தை கக்குவதற்கு அனைத்து வீட்டு பெண்களையும் வாய்க்கு வந்தப்படி எல்லாம் தரக்குறைவாக எல்லை மீறி பேசிக்கொண்டே இருந்தார். என்னை பொறுத்த வரையில் சவுக்கு சங்கர் பல முதல் தலைமுறை பட்டதாரி பெண் பிள்ளைகளுக்கு எதிரி. இவர் பேச்சை கேட்கும் கணவர்களுக்கு சந்தேகம் கூட வரும். இவரின் மீது

நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் சென்ற வாரமே புகார் அளித்திருந்தேன். ஒரு சமூக செயற்பாட்டாளராக இது என்னுடைய சமூக பொறுப்பும் கூட என சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உறுப்பினரும், எண்ணற்ற பெண் காவலர்களை உருவாக்கியவருமான கல்யாணந்தி தெரிவித்துள்ளார்.