பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண் போலீசார் கைது..! போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு..

0
Follow on Google News

மதுரை : மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண்போலீஸ் ஒருவர் அளித்த புகார் தமிழக காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடையவர் யார் என போலீசார் விசாரித்ததில் அவர்களுக்கு பேரதிர்ச்சியே காத்திருந்தது.

மதுரை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தினமும் சரியாக ஐந்து மணிக்கு தனக்கு ஒரு அழைப்பு வருவதாகவும் அதில் பேசும் ஆண் ஒருவர் பாலியல் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் ஆபாசமாக பேசுவதாகவும் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு போலீஸ் என கூறிய பின்னர் இன்னும் அதிகமாக அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கமிஷனர் செந்தில்குமார் குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. காவல் ஆய்வாளர் பிரியா தலைமையிலான குழு தேடுதலை தொடங்கியது.

மதுரை ஆயுதப்படை 11 ஆவதுபிரிவில் பணிபுரியும் இந்த பெண் காவலருக்கு கடந்த மே 12 அதிகாலை ஐந்துமணிக்கு அலைபேசி அழைப்பு வந்துள்ளது. யாரோ என எடுத்துப்பேசுகையில் எதிர்முனையில் பேசியவன் ஆபாசமாக பேசியுள்ளான் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தல்லாகுளம் சைபர்க்ரைம் போலீசார் களத்தில் இறங்கினர்.

பெண்காவலர்க்கு வந்த அழைப்புகளை ஆய்வுசெய்ய தொடங்கினர். மூன்று நாட்கள் நடந்த தீவிரவேட்டையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியே மிஞ்சியிருந்தது. பரமக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரே பெண்போலீஸுக்கு அலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் இவர் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் வேலைபார்ப்பது தெரியவந்தது.

அவரை கைதுசெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரைக்கு பாதுகாப்பு தொடர்பாக வந்தபோது அந்த பெண்ணின் நம்பரை வாங்கியதாகவும் சம்பவத்தன்று குடிபோதையில் தன்னிலை மறந்து பேசியதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை கைதுசெய்த போலீசார் மதுரை கிளைசிறையில் அடைத்துள்ளனர்.