கள்ளக்காதலை விட்டு தம்பியை போட்டு தள்ளிய சகோதரி… உயிர் தப்பினாரா சகோதரன்..!

0
Follow on Google News

திண்டுக்கல் : திருமணம் என்ற பந்தத்தை விடவும் குடும்பம் என்ற சொந்தத்தை விடவும் சிறந்ததா கள்ளக்காதல் என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவிற்கு சமூகத்தில் இந்த கள்ளக்காதல் புரையோடிப்போய் கிடக்கிறது. இதனால் குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல ஒரு குடும்பமே சீரழிந்து போய்விடுகிறது.

மேலும் கள்ளகாதலால் கொலை கூட நடக்கிறது. நிரூபிக்கும் வகையில் திண்டுக்கல்லில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா. வயது 24. இவரை கடந்த வாரம் ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி வீசியுள்ளது. அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யாவுக்கு முன்விரோதமோ பகையோ யாருடனும் இல்லை. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். இதனால் வழக்கை விசாரித்த போலீசாருக்கு குழப்பமே மிஞ்சியது. குற்றவாளிகள் யார் என அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் சூர்யாவின் ஒன்றுவிட்ட சகோதரியான மனிஷா என்பவர் விஷமருந்தினார்.

மனிஷாவும் சூர்யா சிகிச்சை பெற்றுவந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மனிஷா எவ்வித விஷமருந்தும் உட்கொள்ளவில்லை என்பதை கண்டறிந்தனர். மேலும் தகவலை காவல்துறையிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறை மனிஷாவிடம் துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்தது. மேலும் மனிஷாவின் போனை ஆய்வுசெய்ய தொடங்கினர்.

விசாரணையில் மனிஷா பேகம்பூர் பகுதியை சேர்ந்த சர்தார் என்பவருடன் கள்ள உறவில் இருந்தது தெரியவந்தது. மனிஷாவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்டதும் சர்தாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ரகசியமாக உறவை வளர்த்துள்ளனர். ஒருகட்டத்தில் சகோதரனான சூர்யாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

எங்கே அவன் வெளியில் சொல்லிவிடுவானோ என பயந்து சர்தாரிடம் சொல்லி மனிஷா கொலைக்கான திட்டத்தை கூறியுள்ளார். அதையடுத்து சர்தார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதில் அவர் தப்பிக்கவே தான் எங்கே மாட்டிகொள்வோமோ என பயந்த மனிஷா தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

திண்டுக்கல் காவல்துறையினர் மனிஷா மற்றும் சர்தார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இதில் கவுதம், யோகராஜ் ரியாஸ், சர்தார் மனிஷா மற்றும் இன்னொரு உறவுக்காரப்பெண் என ஆறுபேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கள்ளகாதலுக்காக தம்பியையே போட்டு தள்ள முயன்ற சம்பவம் திண்டுக்கல்லை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.