விஜயகாந்த் சமாதிக்கு போங்க.. உங்க வாழ்க்கையில் இதெல்லம் நிச்சயம் நடக்கும்… அகோரி கலையரசன் சொன்ன வாக்கு…

0
Follow on Google News

ஒரு சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தை திறந்தாலே அதில் திடீர் அகோரி கலையரசன் வீடியோக்கள் தான் அதிகமாக இருக்கிறது. youtube சேனல்கள் தொடர்ச்சியாக அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலையரசனை சில வருடங்களுக்கு முன்பே டிக் டாக் பேமஸ் ஆக இருந்தபோது பலருக்கும் தெரிந்திருக்கும். கலையரசன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே டிக் டாக் பிரபலங்கள்.

இருவரும் அடிக்கடி டான்ஸ் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலங்களாக இருந்தனர். அதிலும் கலையரசனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது டியூப் லைட் உடைத்தபடியே பறை இசைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு கலையரசன் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்து இவர்களுக்குள் இப்படி ஒரு பிரச்சனையா? என்று பலரையும் பேச வைத்திருந்தது.

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாகவும் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இப்படியான நிலையில் சில வருடங்களாக கலையரசன் பற்றி எந்த செய்திகளும் இணையத்தில் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது ஒரு சில நாட்களாகவே கலையரசன் திடீர் அகோரி அவதாரம் எடுத்து இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

கலையரசனின் திடீர் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் தன்னை அகோரி என்று சொல்வதை கேட்டு ஒரு சில பிரபலங்கள் கலையரசனுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு கலையரசன் மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் இப்போது மீண்டும் கலையரசன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அகோரி கலையரசன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்து பிரேமலதாவை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், நான் நிறைய மக்களுக்கு விஜயகாந்த் ஐயா இறைவனிடம் சேர்ந்து மக்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன். ஐயாவுடைய கோவிலில் உங்களுடைய வேண்டுதலை வைத்தால் அது கண்டிப்பாக நடக்கும். நீங்கள் எனக்கு திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை வரம் வேண்டும், எனக்கு வேலை வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தால் நிச்சயம் நடைபெறும்.

நான் வாக்கு கொடுக்கிறேன். ஐயா இறைவனோடு தான் சேர்ந்து இருக்கிறார். அவருடைய புண்ணியங்கள் எல்லாம் பல மக்கள் வீட்டில் கிடைத்திருக்கிறது. ஐயாவின் புகழ் உலகெங்கும் பரவும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. விஜயகாந்த் ஐயா எப்போதும் இந்த மதம், இந்த ஜாதி என்று கூப்பிட்டது கிடையாது. இந்துவே எழுதுவா, முஸ்லிமே முழங்கி வா, கிறிஸ்துவனை கிளம்பி வா என்று ஐயா சொல்லவில்லை.

மனிதனே எழும்பி வா, மானிடம் படைக்கவா, உன் பாதங்கள் நடக்க துவங்கினால் உன் பாதைகள் மறுப்பதில்லை என்று சொன்ன வீர தமிழன் விஜயகாந்த் ஐயா. இன்று வீர உறங்கி கொண்டிருக்கிறார். ஐயா எல்லோரிடமும் தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஐயாவின் புகழ் உலகெங்கும் பரவும். நான் அம்மாவை சந்தித்ததில் சந்தோஷம். ஐயாவை சந்தித்து ஆசி பெற வந்தேன் என்று அகோரி கலையரசன் கூறினார். அப்போது பிரேமலதா, நீங்கள் சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

விஜயகாந்த் சமாதியில் கலையரசன் பேசியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கலையரசன் பேசியதை பார்த்தவர்கள்.கடவுள் மனம் படைத்த விஜயகாந்த் தெய்வம் தான், அவர் சமாதி இருக்கும் இடம் கோவில் தான், ஆனால் விஜயகாந்த் சமாதிக்கு சென்று திருமணம் வரம் கேட்பது, பிள்ளை வரம் கேட்பது என்பதெல்லாம், விஜயகாந்த் சமாதி இருக்கும் கோவிலை கேலிக்கூத்தாக்கும் செயல், என அகோரி கலையரசன் பேசியதற்கு விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.