உதயநிதி தப்பவே கூடாது… அண்ணாமலையிடம் அமித்ஷா சொன்ன விஷயம்…

0
Follow on Google News

டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்க துறை நடத்திய அதிரடி சோதனையின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை சுற்றி வளைக்கும், டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் டார்கெட் என பலரும் எதிர்பார்க்க, இதில் செந்தில் பாலாஜி பக்கம் அமலாக்க துறை செல்லாமல் வேறு ஒரு திசையை நோக்கி சென்றது தான் பலருக்கும் ஆச்சரியமாகவும் குறிப்பாக திமுக முதல் குடும்பத்துக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.

டாஸ்மாக் அதிரடி சோதனைக்கு பின்பு சுமார் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என அமலாக்க துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் கூட, இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடத்திற்கு என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகனிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்பு, யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்டாக, இதுவரை பிரபலமாகாத 3 பெயர்கள் அடிபட்டது.

அதில் மூன்று நபர்களுமே துணை முதல்வர் உதயநிதி நெருங்கிய நண்பர்களான ரத்தீஷ் , ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ இவர்கால் மூவரும் அமலாக்க துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது, திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது, இதில் ரத்தீஷ் உட்பட மூவரும் தலைமறைவானார்கள். இந்நிலையில் ரத்தீஷ் யிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தினால், அடுத்து உதயநிதி தான் என்கிற பரபரப்பு நீடித்து வந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வந்த பின்பு, அவ்வளவு தான் முதல்வர் உடன் பாஜக சமரசம் செய்து கொண்டது, இனி டாஸ்மாக் ஊழல் விவகாரம் ஊத்தி மூட படும் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது, அதற்கேற்றாற் போல் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகளை எடுக்காமல் அமைதியாக இருந்து வந்தது அமலாக்க துறை.

இந்நிலையில் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்து சென்ற பின்பு டாஸ்மாக் ஊழல் விவகாரம் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. மேலும் திமுக முதல் குடும்பத்தை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது என கூறப்படுகிறது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக ஆட்சியில் ஊழல் மிக மலிந்து காணப்படுவதற்கு சாட்சி;

டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ஊழல் நடந்து சட்டவிரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற தயாராக இருக்க வேண்டும்” என அமித் ஷா பேசி இருந்தார், இந்நிலையில் டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது என அமலாக்க துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது பிகா பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மதுரை வந்த அமித்சா தங்கியிருந்த GRT ஓட்டலில் தனியாக தனியாக சந்தித்து அண்ணாமலை நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார், அதில் டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதி மீது கைவைத்தால் அனுதாபம் ஏற்ப வாய்ப்பில்லை என்கிற ரிப்போர்ட் ஏற்கனவே அமித்ஷா கவனத்துக்கு வந்ததை அண்ணாமலையிடம் தெரிவித்து இருக்கிறார் அமித்ஷா.

மேலும் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து எதிர் வரும் கைது நடவடிக்கையின் போது, தமிழகத்தில் அதை எப்படி அரசியலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அண்ணாமலைக்கு பல விஷயங்களை அமித்ஷா பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here