இதை செய்ய முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.! ரஜினியால் விரக்தி அடைந்த தமிழருவி மணியன்.!

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர், பேச்சாளர்,தமிழக அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் மேடை பேச்சுக்கள் அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் பேசுவதால் தமிழக முதல்வராக இருந்த காமராஜரால் தமிழருவி என புனைப்பெயர் சூட்டப்பட்டார்.தொடர்ந்து தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி கொண்டு வந்த தமிழருவி மணியன் 2009-ஆம் ஆணடு காந்திய மக்கள் இயக்கதைத் தொடங்கினார், பின்பு 2014-ஆம் ஆண்டு காந்திய மக்கள் கட்சி என்றும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

தமிழக அரசியலில் திராவிட காட்சிகளுக்கான மாற்று அரசியலை முன்னெடுத்து தொடர்ந்து பேசி வந்த தமிழருவி மணியன், அரசியல் அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவதற்கு முன்பே அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினர்.ரஜினி ரசிகரகாளை ஓன்று திரட்டி திருச்சியில் பெரிய மாநாட்டை நடத்தி காட்டினார் தமிழருவி மணியன். இந்த நிலையில் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை அறிவிக்கப்பட்டார்.

மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அறிவிக்கப்பட்ட பின்பு புதிய கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார் தமிழருவி மணியன், இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக புதிய அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பால் பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில், இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடபட மாட்டேன் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது, சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது.

இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது, மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன், தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்.என தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், மேலும் ரஜினிகாந்த் மீது நம்பிக்கை வைத்து கடத்த மூன்று வருடங்களாக மிக கடுமையாக ரஜினியின் புதிய அரசியல் கட்சிக்காக உழைத்து வந்த தமிழருவி மணியனை ஏமாற்றம் அடைய செய்துள்ள ரஜினியின் முடிவு அவரை அரசியலில் இருந்து விலகும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?