விமான நிலையத்தை சுற்றிய அமலாக்கதுறை… U TURN போட்ட ரத்தீஷ்…

0
Follow on Google News

டாஸ்மாக் மெகா ஊழல் விவகாரம் தமிழகத்தை மட்டுமில்லாமல் இந்தியாவே உலுக்கி வருகிறது. இந்நிலையில் மது பான ஊழல் தொடர்பாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, அதன் பின்பு டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதே போன்று தெலுங்கானாவில் மதுபான ஊழலில் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்பு நடந்த தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

இதே பார்முலாவை பின்பற்றி, டாஸ்மாக் ஊழல் மூலம் துணை முதல்வர் உதயநிதியை டார்கெட் செய்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கான வேளையில் மிக தீவிரமாக அமலாக்க துறை பின்னணியில் செயல்ப்பட்டு வருகிறது பாஜக என்கிற பரபரப்பும் தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆதாரங்கள் அடிப்படையில், டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில்.

ரத்தீஷ் சொன்னதை தான் செய்தோம் என ஒரே போடாக போட்டு கொடுத்துவிட்டார்கள் டாஸ்மாக் அதிகாரிகள் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து உதயநிதி நெருங்கிய நண்பர்கள் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ இவர்கள மூவரும் அமலாக்க துறை வலையில் சிக்கினார்கள். இவர்களை தூக்கி விட்டால் அடுத்து உதயநிதி தான் என ரத்தீஷ் – ஆகாஷ் பாஸ்கர் இருவரையும் அமலாக்க துறை நெருங்கி வந்த நிலையில் இவர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

இதில் ஆகாஷ் பாஸ்கர் – விக்ரம் ஜூ ஜூ இருவரும் பெங்களூரில் தலைமறைவானார்கள், ரத்தீஷ் லண்டன் தப்பி ஓடினார். இந்நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனம் , டாஸ்மாக் ஊழியர்களை விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதும், தலைமைறைவாக இருந்தவர்கள் வெளியே வர தொடங்கினார்கள்.

இதில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ இருவரும் சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டது, மேலும் லண்டனில் தலைமறைவாக இருந்து வந்த ரத்தீஷ் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது இனி நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என சென்னை திரும்ப விமான டிக்கெட் எடுத்து சென்னை வருவதற்கு தயாராக இருந்துள்ளார்.

அதே நேரத்தில் ரத்தீஷ் சென்னை திரும்ப டிக்கெட் எடுத்துவிட்டார், அவர் விமான நிலையம் வந்து இறங்கியதும் கோழி அமுக்குவது போன்று அமுக்கி,திகார் சிறைக்கு கொண்டு சென்று விட வேண்டம் என அமலாக்க துறை விமானநிலையத்தில் தயாராக இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை திரும்பி வர லண்டனில் தயாராக இருந்த ரத்தீஷ் க்கு, சென்னையில் இருந்து வழக்கறிஞர் மூலம் ஒரு தகவல் சென்று இருக்கிறது.

அதாவது டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை செய்யவும், டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்தவும் தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது, இந்த ஊழலில் தொடர்புடைய ரதீஸ் மீது விசாரணை நடத்தவும், கைது செய்யவும் எந்த தடையும் இல்லை, ஆகையால் சென்னை திரும்பினால் அமலாக்கத்துறை உங்களை தட்டி தூக்க தயாராக இருக்கிறது என்கிற தகவல் லண்டனில் இருந்த ரத்தீஷ் க்கு சென்று இருக்கிறது.

உடனே விமான டிக்கெட்டை கேன்சல் செய்து யூ டர்ன் போட்டு திரும்பிய ரத்தீஷ் தற்பொழுது வரை லண்டனில் தலைமறைவாக தான் இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரத்தீஷை தட்டி தூக்க அடுத்தகட்ட நடவடிக்கையில் அமலாக்க துறை இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here