டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து அமலாக்க துறை எதிராக டாஸ்மாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தரரான டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்க துறை சோதனை செய்யவும், டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
ஆனால் அமலாக்க துறை இனி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை செய்யவும், டாஸ்மாக் உளையர்களிடம் விசாரணை நடத்தவும் அவசியம் இல்லை. ஏனென்றால் அமலாக்க துறைக்கு தேவையான் முக்கிய ஆவணங்கள் போதுமானது இதற்கு முன்பு நடந்த சோதனையிலே கிடைத்து விட்டது என்றும், மேலும் சமீபத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் விசாகன் உட்பட அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் அமலாக்க துறைக்கு தேவையான தகவல்கள் அவர்கள் மூலம் பெறப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது அமலாக்க துறை கைவசம் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நபர்களான ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரை அமலாக்க துறை விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் உடன் சந்திப்பின் போது டாஸ்மாக் விவகாரத்தில் தன்னுடைய மகனை காப்பாற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வந்த தகவல் குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில்.
முதல்வர் நேரடியாக யாரிடமும் உதயநிதிகாக சமரசம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என உறுதி செய்யும் டெல்லி வட்டாரம். ஆனால் முதல்வர் தரப்பில், முதல்வர் டெல்லியில் இருந்த போதே, முக்கிய இரண்டு நபர்களிடம் டாஸ்மாக் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது என தெரிவிக்கிறது டெல்லி வட்டாரங்கள். அதில் முக்கிய பாஜக மத்திய அமைச்சர் ஒருவருடனும், மற்றும் நாக்பூர் RSS முக்கிய நிர்வாகி உருவருடன் முதல்வர் தரப்பில் இருந்து பேசப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், ஆகையால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து நகர்வுகளை இன்னும் தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை முறியடிக்கும் வேளையிலும் அமலாக்க துறை இறங்கியுள்ளது.
அடுத்த மூன்று வாரத்தில் அமலாக்க துறை தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் AFFIDAVIT தாக்கல் செய்ய இருக்கிறது, சுமார் 500 பக்கத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள ஊழலை ஆதாரத்துடன் தன்னுடைய AFFIDAVIT ல் தாக்கல் செய்ய இருக்கிறது அமலாக்க துறை. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்த கூடாது என்கிற இடைக்கால தடையையும் விரைவில் நீக்கபடும் என உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள்.
மேலும் மத்திய அரசியல் ஒரு ஏஜென்சியான அமலாக்க துறைக்கு இது ஒரு கவுரவ பிரச்சனையாக பார்க்க படுகிறது. அமலாக்க துறை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் மூலம் முட்டு கட்டை போடுவது, பின்பு அமலாக்க துறை நீதிமன்றத்தில் வாதாடி அந்த முட்டு கட்டையை நீக்கி அடுத்தகட்டத்துக்கு இந்த டாஸ்மாக் ஊழலை எடுத்து செல்வது என்பது, அமலாக்க துறைக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதியை நோக்கி நகர தொடங்கியுள்ள அமலாக்க துறை. இதில் அடுத்தடுத்து இந்த ஊழலில் சிக்கியுள்ளவர்களை கைது செய்து தன்னுடைய கவுரவத்தை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் அமலாக்க துறைக்கு ஏற்பட்டுள்ளதால், தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கையை தீவிரபடுத்தி வருகிறது அமலாக்க துறை.