நீதிமன்றம் அதிரடி… கைது செய்ய தடையில்லை… ஆட்டத்தை தொடக்கிய அமலாக்க துறை…

0
Follow on Google News

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்க துறை எடுத்து வந்த அடுத்தடுத்து நடவடிக்கைகளை தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், அமலாக்கதுறைக்கு எதிராக வழக்கு தொடுக்க பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இனி அமலாக்க துறை விசாரணையே நடத்த கூடாது என்பது போன்று, அமலாக்க துறைக்கு நீதிமன்றம் குட்டு, அமலாக்க துறைக்கு விழுந்த சம்மட்டி அடி, என ஆளும் தரப்பு கொண்டாடியது, ஆனால் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக தற்போதையை உண்மை நிலவரம் என்ன என்பதும், உச்சநீதி மன்றம் என்ன உத்தரவு போட்டது. உண்மையிலே டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து அமலாக்க துறை விசாரணையே நடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவு போட்டதா.? என்கிற கேள்விக்கெல்லாம் தற்பொழுது பதில் கிடைத்துள்ளது.

அதாவது டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கதுறை விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது டாஸ்மாக் நிறுவனம். ஆகையால் வழக்கு தொடுத்த டாஸ்மாக் நிறுவனத்தை சேர்த்த ஊழியர்கள், அதிகாரிகளை அழைத்து அமலாக்க துறை விசாரணை நடத்த கூடாது என்று தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்ததே தவிர, இந்த ஊழலில் அமலாக்க துறை ரேடாரில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோர் மீது அமலாக்க துறை விசாரணை நடத்தவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எந்த ஒரு தடையும் விதிக்க வில்லை.

இந்நிலையில் ஏற்கனவே ஆகாஷ் பாஸ்கர் மற்றும் ரத்தீஷ் அகியோருக்கு அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி இருந்தது, ஆனால் இவர்கள் இருவரும் ஆஜராக வில்லை. மேலும் அமலாக்க துறை எந்த நேரமும் இவர்களை கைது செய்யலாம் என்கிற ஒரு பரபரப்பு நீடித்து வந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கர், ரதீஸ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோர் தப்பியோடி தலைமறைவானார்கள்.

இதில் விக்ரம் ஜூ ஜூ மற்றும் ஆகாஷ் பாஸ்கர் பெங்களூரிலும், ரத்தீஷ் லண்டனிலும் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆகாஷ் பாஸ்கர் மற்றும் விக்ரம் ஜூ ஜூ இருவரும் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் லண்டனில் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் ரத்தீஷ் அடுத்து ஓரிரு தினங்களில் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரத்தீஷ் – ஆகாஷ் பாஸ்கர் – விக்ரம் ஜூ ஜூ ஆகிய மூவருக்கு அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராக நோட்டிஸ் அனுப்ப தயாராகி விட்டது என்றும், இம்முறை சம்மன் அனுப்பி ஆஜராக வில்லை என்றால், இந்த மூவரும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது, அதனால் இவர்கள் மூவரும் இம்முறை அமலாக்க துறை சம்மன் அனுப்பியதும் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் டாஸ்மாக் விசாரணைக்கு ஆஜராகும், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ, ரத்தீஷ் ஆகியோர் அமலாக்க துரை விசாரணை முடிவில் இந்த மூவரில் ரத்தீஷ் அமலாக்க துறையால் கைது செய்ய அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் விசாரணைக்கு ஆஜரானாலும்,ஆஜராகவில்லை என்றாலும் உதயநிதியின் நெருங்கிய நண்பர் ரதீஸ் கைது செய்ய அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here