களத்திற்கு வந்த இன்பநிதி… 2026 தேர்தலில் இருக்கும் TWIST ….

0
Follow on Google News

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்ளு பேரனும், முதல்வர் முக ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில் நிதி நிர்வாகம் தொடர்பான படித்து வந்தார். மேலும் கால் பந்தாட்ட வீரரான இன்பநிதி சர்வதேச கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தின் நான்காவது வாரிசான இன்பநிதி எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் திமுகவின் முக்கிய நிகழ்வில் தென் பட தொடங்கினார் இன்பநிதி. சமீப காலமாக திமுக நிகழ்வுகளில் இன்பநிதி கலந்துகொள்ளத் தொடங்கியவர்.

கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் உதய சூரியன் சின்னம் பொறித்த சட்டை அணிந்து கலந்துகொண்டார் இன்பநிதி, அதனை தொடர்ந்து பொங்கல் விழாவின் போது முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றபோதும் உதய சூரியன் சின்னம் பொறித்த சட்டை அணிந்து வாழ்த்து பெற்றார், மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து சிறப்பு விருந்தினராக இன்பநிதி கலந்து கொண்டார்.

அப்படி இன்பநிதி கலந்து கொண்ட போது, அமைச்சர் உட்பட திமுகவினர் விழுந்து விழுந்து இன்பநிதியை கவனித்தது, இன்பநிதி அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடு தான் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேரடியாக அரசியலில் இன்னும் களம் இறங்காமல் இருந்து வந்த இன்பநிதி தற்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டதால், அவருடைய அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் கருணாநிதி காலத்தில் அவருடைய வாரிசுகளான முக ஸ்டாலின், மற்றும் முக அழகிரி ஆகியோர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு முரசொலியில் பணியாற்ற வைத்து பின்பு அரசியலுக்குள் வரவழைக்கப்பட்டார்கள், அதே போன்று உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்து அரசியலுக்கு உள்ளே வந்தார். தற்பொழுது இன்பநிதி லண்டனில் படிப்பை முடித்து திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்பநிதி முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவருக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக எப்படி அவருடைய தாத்தா முக ஸ்டாலின் முரசொலியில் பயிற்சி பெற்று அரசியலுக்கு வந்தாரோ, அதே போன்று இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த தினத்தில் இருந்து இன்பநிதி க்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, நிதி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கலைஞர் தொலைக்காட்சியில் இன்பநிதிக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்பட வில்லை என்றும், தற்பொழுது நிர்வாகத்தின் நிதி தொடர்பான பணிகளை கவனித்து வரும் இன்பநிதி, விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் காலை அலுவலகத்திற்கு வரும் இன்பநிதி மாலை வரையும், ஒரு சில நாட்களில் மதியம் வரை கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் இன்பநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அதற்கான பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தல் பிரச்சாரம் மூலம் தன்னுடைய அரசியல் பணியை இன்பநிதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here